.

Pages

Monday, November 18, 2013

முதல்வரின் அறிவிப்பை அதிரை காவல் நிலையத்தில் செயல்படுத்த வலியுறுத்தி ம.ம.க வின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு [ காணொளி ] !

[ பெண்கள் பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வந்து செல்லும் காட்சி ]

கடந்த அன்று 23-04-2013 நடை பெற்ற தமிழ்நாடு சட்ட பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கையின் கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர். எம். எச் ஜவாஹிருல்லா அவர்கள் பாஸ்போர்ட் விசாரணைக்காக சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில மாவட்டங்களிலே, இராமநாதபுரம் மாவட்டம் உட்பட, பெண்கள் உள்பட எல்லோரையும் காவல் நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இதை சீர்படுத்துவதற்கு இந்த அரசு முன்வர வேண்டுமென்று என்று கேட்டுக்கொண்டதை அடுத்து, சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக் கூடாது. காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது. அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்று தான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடை பெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு, இது போன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அதிரை காவல் நிலையத்தில் தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தி எதிர்வரும் 21-11-2013 அன்று மாலை 4 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள மனித நேய மக்கள் கட்சியின் அதிரை கிளை சார்பாக அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் K. ராவுத்தர்ஷா ஆகியோரின் கண்டன உரை இடம்பெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து த.மு.மு.க / ம.ம.ம கட்சியின் அதிரை கிளை பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி அவர்கள் நம்மிடம் தெரிவித்ததாவது...




5 comments:

  1. நல்ல விசயம்தான் ஆனால்

    நாமதான் நாமாஇல்லையே எப்படி?

    ReplyDelete
  2. அவசியமான ஓன்று அனைவரும் கலந்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  3. அவசியமான ஒன்று இதை பார்க்கும் வாசகர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளவும்....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்.
    நல்லதொரு முயற்ச்சி அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதுடன் தங்களுடைய நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.