.

Pages

Wednesday, November 6, 2013

வதந்திகளை நம்ப வேண்டாம் ! தக்வா பள்ளியின் நிர்வாகத் தலைவர் வேண்டுகோள் ! [ காணொளி ]

தக்வாப் பள்ளியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மீன் மார்க்கெட் பகுதியை விரிவாக்கம் செய்யும் வண்ணம் அதில் புதிய கட்டிடம் ஒன்றை மிகப்பிரமாண்டமாய் கட்டி எழுப்புவதென்று அதன் நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டதை அடுத்து கடந்த [ 17-06-2013 ] அன்று அடிக்கல் நாட்டப்பட்டடு கட்டுமானப்பணிகள் மும்முரமாக  நடைபெற்று வந்தன. இதில் ஏராளமான கட்டுமான தொழிலார்கள் பணிகளில் ஈடுபட்டும் வந்தனர்.

நகர வளர்ச்சியில் நமது பங்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்டுமானப்பணிக்குரிய செலவினங்களை நம்மிடம் பொறுப்பேற்றுக் கொள்ளும் படி தக்வாபள்ளி நிர்வாகம் சார்பாக வேண்டுகோளும் விடப்பட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிதாக கட்டிவரும் மீன் மார்க்கெட்டின் கட்டுமானப்பணிகளுக்கு தடையாம்ல !? என்ற செய்தி நகரில் காட்டுத்தீயை போல் பரவியது. இதைதொடர்ந்து நம்மை [ அதிரை நியூஸ் ] அழைத்து இது வெறும் வதந்திதான். கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதற்கு வெளிநாடுவாழ் அதிரையர்கள் உதவ முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை மீண்டும் நம்மிடம் முன்வைத்துள்ளார் அதன் நிர்வாகத் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் K.S. அப்துல் சுக்கூர் அவர்கள்.

தொடர்புக்கு  :
K.S. அப்துல் சுக்கூர்
தலைவர் - தக்வாப் பள்ளி டிரஸ்ட்
Mobile : 9442759377

தக்வாப் பள்ளி டிரஸ்டின் வங்கி கணக்கு விவரம் :
Current A/c Name : THULUKKA PALLIVASAL TRUST
Bank Name : DHANALAXMI BANK 
Branch : ADIRAMPATTINAM 
Current A/c No. 011505300019316
IFS Code : DLXB0000115

2 comments:

  1. இந்த மீன் மார்கட் அல்லாஹ்வின் இல்லம் எனும் பள்ளிவாசலுக்கு சொந்தமானது இதில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நியாயமான வாடகைகளை கொடுத்தாலே போதுமானது தான் அவர்கள் சரிவர அல்லது போதிய வாடகை கொடுக்காததுதான் இன்று தலைவரை இப்படி நம்மிடம் கெஞ்சும் அளவிற்கு கொண்டுபோய் இருக்கின்றது
    ஏற்கனவே பள்ளி கடை கட்டிடத்தில் வியாபாரம் செய்து சரிவர நடத்த முடியாதவர்கள் திரும்ப கடையை பள்ளி நிருவாகத்திடம் ஒப்படைக்காமல் மேல் வாடகைக்கு மூன்றாம் நபர்களிடம் கொடுத்து கூடுதல் வாடகையை தாம் வைத்துக்கொண்டு முன் பேசிய சிறிய தொகையை மட்டும் பள்ளி நிருவாகத்திடம் கொடுக்கிறார்கள் அதில் இருந்து வரும் வருமானம் நிச்சயமாக அந்த நபருக்கு ஹராமாகும்
    பள்ளி நிருவாகத்தில் பங்கு கொண்ட அத்துணை மெம்பர்களும் வாடகை தாரர்களை சரிசெய்து மார்க்கத்தை போதித்தாகிலும் சட்ட நடைமுரைகளிலாகிலும் நியாயமான வாடகை பள்ளிக்கு வந்து சேரும்படி முயற்ச்சிக்கவும்

    ReplyDelete
  2. ஏன் தக்வா பள்ளிக்கு சொந்தமான இடத்தை கட்டி வாடகைக்கு விடுகிறோம் என்று சிலருக்கு தாரைவார்த்துகொடுத்து அவர்கள் அதில் வாடகைவிட்டு சம்பாதித்து கொண்டிருக்கும் நிலை நீடிக்கவா அல்லாஹ் பயந்து அனைத்து கடைகளை கடையை நடத்துபவர்களிடம் கொடுத்து வாடகை பெற்றால் அனைவருக்கு நலம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.