.

Pages

Friday, November 22, 2013

அதிரை பேரூராட்சியின் அதிரடி நடவடிக்கை ! சாலைகளில் மேய்ந்து திரிந்த மாடுகள் பறிமுதல் !

அதிரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 1 முதல் 21 வார்டுகளில் ஆடு மற்றும் மாடுகள் அலைந்து திரிகின்றன. இதனால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கப்பட்டு இறந்து வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி ஆபத்து ஏற்படுகிறது. எனவே [ 21-11-2013 ] வியாழக்கிழமை முதல் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வளர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆடு மாடுகளை பிடித்து பேரூராட்சி கட்டுப்பாட்டில் வைத்து பொது ஏலம் விடப்படும் என பேரூராட்சியின் செயல் அலுவலர் அறிவித்ததை அடுத்து இன்று காலை முதல் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் அதிரடி நடவடிக்கையாக சாலைகளில் மேய்ந்து திரியும் மாடுகளை பறிமுதல் செய்து டிராக்டர் வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டது. இந்தபணிக்காக 10 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர். பறிமுதல் செய்த அனைத்து மாடுகளும் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.



16 comments:

  1. Replies
    1. எப்படி நன்றி சொல்வது அதிரைவாசிகளே.
      இதைவிட தீங்கு விளைவிக்கும் நாய்கெளல்லாம் சுதந்திரமாய் திரிகிறது,

      பேருராட்சி செம்மையாக செயல்பட்டால் அவர்களைப்பார்த்து மக்கள் மாறுவார்கள். செயல் மறந்துகிடக்கும் செயல் அலுவலரின் நிலையே பேருராட்சிக்கு வருமானம் வேண்டும் என்ற நோக்கிலோ என்ற எண்ணம் தோன்றுகிறது,

      நாய்களையும் பிடியுங்கள்

      Delete
  2. இதை செயலில் கொண்டு வந்த அதிகாரிகளுக்கு நன்றி. இரவிலும் இல்லாமல் பட்டப் பகலிலும் இந்த மாடுகளின் தொல்லைகள் என் வீட்டு வாசலில் ரொம்ப ரொம்ப அதிகம். பொழுது விடிந்து வெளிக்கதவை திறந்து பார்த்தால் அப்படியே என் வீட்டு வாசல் இந்த மாடுகளினால் நாறிப்போய் கிடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எப்படி நன்றி சொல்வது அதிரைவாசிகளே.
      இதைவிட தீங்கு விளைவிக்கும் நாய்கெளல்லாம் சுதந்திரமாய் திரிகிறது,

      பேருராட்சி செம்மையாக செயல்பட்டால் அவர்களைப்பார்த்து மக்கள் மாறுவார்கள். செயல் மறந்துகிடக்கும் செயல் அலுவலரின் நிலையே பேருராட்சிக்கு வருமானம் வேண்டும் என்ற நோக்கிலோ என்ற எண்ணம் தோன்றுகிறது,

      நாய்களையும் பிடியுங்கள்

      Delete
  3. இதை செயலில் கொண்டு வந்த அதிகாரிகளுக்கு நன்றி.
    எனது வீட்டின் அருகிலும் பக்கத்து வீட்டினரின் மாடுகள் அசிங்கப்படுத்திவிடுகிறது. மாட்டின் உரிமையாளர்களிடம் சொன்னால் அவர்கள் தேவை இல்லாத பிரச்சினைக்கு வருகிரார்கள் உங்களின் செயலின் மூலமாகவாது அவர்கள் அவர்களின் வளர்ப்பு பிரானிகளை கட்டுப்பாட்டில் வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது தேவை இல்லாத பிரச்சினை ஏற்படாது. மிக்க நன்றி உங்கள் சேவைக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எப்படி நன்றி சொல்வது அதிரைவாசிகளே.
      இதைவிட தீங்கு விளைவிக்கும் நாய்கெளல்லாம் சுதந்திரமாய் திரிகிறது,

      பேருராட்சி செம்மையாக செயல்பட்டால் அவர்களைப்பார்த்து மக்கள் மாறுவார்கள். செயல் மறந்துகிடக்கும் செயல் அலுவலரின் நிலையே பேருராட்சிக்கு வருமானம் வேண்டும் என்ற நோக்கிலோ என்ற எண்ணம் தோன்றுகிறது,

      நாய்களையும் பிடியுங்கள்

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    செய்தது நல்ல காரியம்.

    தெருவுகளில் அலைந்து திரிந்த மாடுகளை ஒரு வழியாக பிடித்தாகி விட்டது.

    அதுபோல் தெருக்களில் சாலைகளில் தேவையற்ற மணல்களை அப்புறப்படுத்தினால், வருவோர் போவோர் மூக்கிலும் காதுகளிலும் வாய்களிலும் தூசிகள் போய் தேவையற்ற நோய்களை உண்டாக்காமல் இருக்குமே.

    ரோடு போட வழி இன்னும் வரவில்லை, இந்த மணலையாவது அப்புரப்படுத்தலாமா இல்லையா?

    அதிரையில் மழை வருமா என்று அதிரை மக்களின் எதிர்பார்ப்பு.

    அதிரை மார்கெட்டில் மலிவான விலையில் மீன் கிடைக்குமா என்று அதிரை மக்களின் எதிர்பார்ப்பு.

    அதிரை மக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று இத்தளத்தை சுற்றி இருப்பவர்களின் எதிர்பார்ப்பு.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. STATE BANK பக்கத்துவீட்டின் ரோட்டி ஓரத்தில் கம்பிவலையால் ஆக்கிரமி்க்கப்ட்டுள்ளது, இதனால் வீட்டுக்காரர்களுக்கும் வங்கிக்கு வருபவர்களுக்கும் ஆபத்து நேரிடலாம் அதையும் அப்புறப்படுத்துங்களேன்,

      Delete
  5. ஜமால் காக்கா சொல்லுவதுப்போன்று கிடக்கின்ற மணல்,செங்கள் ஜல்லி கற்கல் போன்றவைகள் வீடுகட்டுபவர்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் தவரும் பட்சத்தில் நிர்வாகம் அவற்றையும் பறிமுதல் செய்து ஏலம் விட்டால் நன்றாக இருக்கும்.
    தெருக்களின் சாலைகள்
    நன்றிகளுடன் வாழ்த்துக்கள் பேரூர் நிர்வாகத்தினர் அனைவருக்கும்

    ReplyDelete
  6. //அதிரை மார்கெட்டில் மலிவான விலையில் மீன் கிடைக்குமா என்று அதிரை மக்களின் எதிர்பார்ப்பு.//

    தம்பி ஜமால் அவர்களே! மீன் மலிவாகவே மார்கெட்டுக்கு வருகிறது. ஆனால் அங்கு நிலவும் கொடிய வட்டி முறையால் அந்த வட்டிப் பணமும் சேர்த்து விலையில் வைத்து விற்கப் படுவதால் விலை ஏற்றம்.

    வட்டி இல்லாத கடன் வசதியை மீன் கடைக காரர்களுக்கு செய் து கொடுத்தால் விலை குறைய வாய்ப்பு அதிகம். விள ஏற்றத்தால் பயன் பெறுவோர் மீன் வியாபாரிகள் அல்ல. வட்டி மூசாக்களே.

    - ஒரு மீன் வியாபாரியின் குமுறலில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. மதுக்கடைகளை மறந்தால் இவர்களும் பணக்காரர்களே

      Delete
  7. மாடுகளை கவனித்தது போல் "சாச்சப்பா" வையும் கவனித்தால் நலம்.

    சாச்சப்பா = நாய்கள்.

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  9. எப்படி நன்றி சொல்வது அதிரைவாசிகளே.
    இதைவிட தீங்கு விளைவிக்கும் நாய்கெளல்லாம் சுதந்திரமாய் திரிகிறது,

    பேருராட்சி செம்மையாக செயல்பட்டால் அவர்களைப்பார்த்து மக்கள் மாறுவார்கள். செயல் மறந்துகிடக்கும் செயல் அலுவலரின் நிலையே பேருராட்சிக்கு வருமானம் வேண்டும் என்ற நோக்கிலோ என்ற எண்ணம் தோன்றுகிறது,

    நாய்களையும் பிடியுங்கள்

    ReplyDelete
  10. கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்களே
    மாடுகளை பிடித்தால் உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்யலாம் என்ற பேருராட்சியின் எண்ணத்திற்கு நாம் மனித உரிமையில் முலம் எண்ண செய்யலாம்,

    ஏன் நாய்களை பிடிக்க தவறிவிட்டார்கள். இந்த அதிகாரிகள், இதன் வருமானத்தின் மீது நாம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம், அனைத்துதொல்லைகளையும் அப்புறப்படுத்தாமல் இந்த நடவடிக்கை மட்டும் ஏன்?

    ReplyDelete
  11. எப்படி நன்றி சொல்லுவது நம்மூர் வாசிகளுக்கு.

    சென்ற முறை ஊர் சென்ற போது கடைத்தெருவில் நாய்களை பிடித்து கொண்டிருந்ததை பார்த்தேன் இரண்டு நாட்கள் கழித்து பேரூராட்ச்சி ஊழியரிடம் எங்கள் தெருக்களிலும் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது அதையும் பிடிக்க சொன்னேன் அவர் கூறிய வார்த்தை என்ன தெரியுமா விலங்கினங்களை கொடுமை படித்துகிறார்கள் என்று பேரூர் நிர்வாகத்தினர் மீது வழக்கு கொடுத்துள்ளார்கள். அதனால் அவர்கள் அந்த திட்டத்ட்தை கை விட்டுவிட்டதாக கூறினார்கள்.
    என்ன கொடுமையப்பா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.