.

Pages

Saturday, November 9, 2013

கவியன்பன் கலாமின் கவிதைக்கு குரல் கொடுத்த பிரபல பதிவர் ஜாஃபர் [ காணொளி ]

அதிரையின் பிரபல கவிஞர் அபுல் கலாம். இவர் யாப்பு வடிப்பதில் மூத்த கவிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர். இவருக்கு இணையத்தோடு தொடர்புடைய நட்பு வட்டம் ஏராளம். குறிப்பாக இவர் எழுதும் கவிதையை ரசிக்கும் பெண் வாசகர்கள் அதிகம். வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். தான் பெற்ற கவி புலமையை பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற உயரிய பண்புடையவர். எந்தவொரு தலைப்பை கொடுத்தாலும் உடனுக்குடன் கவிதை எழுதுவதில் வல்லவர். 'கவியன்பன்' என்றும் 'கவிக்குறள்' என்றும் இணையத்தோடு தொடர்புடைய அவர்களின் நண்பர்களால் அன்புடன் பாராட்டப்படுபவர்.

இலண்டன் வானொலி இவரின் கவிதையை வாரமொருவரை தொடர்ந்து வாசித்து வருகின்றன. சமீபத்தில் இவருக்கு இலங்கையிலிருந்து செயல்படும் சர்வேதச அளவினான தடாகம் இலக்கிய வட்டத்திலிருந்து 'கவித்தீபம்' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.

சமீபத்தில் இவர் எழுதிய கவிதை 'அருளைச் சுமந்த ஹாஜிகளே....வருக..!' இந்தக் கவிதையை அதிரையரின் படைப்புகளை தொடர்ந்து பதிந்து வரும் வலைதளமாகிய 'அதிரை நிருபர் பதிப்பகத்தில்' பதியப்பட்டு அனைவரின் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. இவரின் கவிதையை அதிரையின் பிரபல பதிவர் ஜாஃபர் அவர்கள் தனது இனிய குரலில் பதிவு செய்து தனது நண்பர் ஜமாலுதீனுக்கு அனுப்ப. அவரோ இரு படைப்பாளிகளின் ஆர்வத்திற்கு ஊக்கம் தருகின்ற வகையில் அவற்றை காணொளியாக வடிவமைத்து யூடூயுபில் ஏற்றிக்கொடுத்திருக்கிறார்.

காணொளியை கண்டு மகிழ்வதற்கு முன்பு சகோ. ஜாஃபர் அவர்களைப்பற்றிய சிறு குறிப்பொன்றை நாம் பார்ப்போம்...
நமதூர்  காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுயதாய அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், ஊடக ஆர்வலர், அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தின் நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டு சேவை செய்து வருகின்றார்.

சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை நமதூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன. இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.

இனிய குரலில் ஜாஃபர் பாடிய காணொளி :

'கவியன்பன்' கலாம் இயற்றிய எழுத்து வடிவில் உள்ள கவிதை :

அருளைச் சுமந்த ஹாஜிகளே....வருக..!
ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே
அச்சம் இறையுடன் கொண்டோரே
இச்சை துறந்திடும் பண்பீரே
பச்சைக் குழந்தையாய் ஆனீரே!

மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில்
அஹ்மத் நபிகளும் காண்பித்த
இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில்
இஹ்சான் உணர்வுடன்  சென்றீரே!

கண்ணீர் வடித்ததால் பாவங்கள்
தண்ணீர் கழுவிய தோற்றத்தில்
எண்ணம் முழுவதும் உள்ளத்தில்
வெண்மை மொழுகிடச் செய்தீரே!

வண்ணம், இனங்களும் வேறாகி
வெண்மை உடுத்திய தோற்றத்தில்
எண்ணம் , நினைவுகள் ஒன்றாகி
கண்ணில் நிறுத்திய  கஃபாவில்

சுற்றி வருவதும்  குர்பானி(யால்)
பற்றை அறுப்பதும் செய்தீரே
கற்றுத் தெளிந்ததும் ஈமானில்
சற்றும் விலகிடாச் சான்றோராய்!

கோபம் குறைகளை  மன்னித்து
பாபச் சுமைகளை நிந்தித்து
தீபச் சுடரெனத் தீன்ஏந்தி
சாபம் களைந்திடச் செய்தீரே!

பல்லா யிரமெனப் பாரோரும்
கல்லால் எறிந்ததேன் ஷைத்தானை
உல்லா  சமாகவே இல்லாமல்
அல்லாஹ் விதித்தநல் லாணைக்கே!

வற்றாக் கிணறென ஜம்ஜம்நீர்
முற்றும் குடித்தநல் ஹாஜீரே!
இற்றைப் பொழுதினில் இன்பம்தான்
சுற்றம் சுகம்பெறத் தந்தீரே!

மங்காச் சுடரென மக்காவில்
பொங்கும் அருளொளி   ஈமானை
எங்கள் இடத்தினில் ஏற்றீரே
தங்க மனத்துடன் வாரீரே!

'கவியன்பன்' கலாம்

11 comments:

  1. ஜஸாக்கல்லாஹ் கைரன்

    ReplyDelete
  2. கவித்தீபம் அவர்கள் ஹஜ்ஜின் சிறப்பினை கவி வரியில் கொண்டுவந்து அதை சகோ. ஜாஃபர் அவர்களின் தேனினும் இனிய குரலில் வாசித்தவிதம் அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள் .

    கவித்தீபத்தின் இப்புதிய முயற்ச்சிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி அதிரை மெய்சா. இன்ஷா அல்லாஹ் இனி தொடரும் இந்த முயற்சி; இது அன்புச் சகோதரர் ஜாஃபர் அவர்களால் தொடங்கப்பட்டு, அன்புச் சகோதரர் ஜமாலுதீன் அவர்களால் தூண்டுதல் செய்யப்பட்டு, நம் விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் மற்றும் அதிரை நிருபர் நிர்வாகிகளால் ஊக்கமும் ஆதரவும் அளிக்கப்பட்டு, அல்லாஹ் உதவியால் மேன்மேலும் தொடரும்...

    ReplyDelete
  4. Arumai......arumai. Sareyana nearaththel enthapathevu makkalukkum Hai mudeththu naadu therumpum haje kalukku payan tharum padal. Valka valkavea Mr kalam& jafar

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மச்சான் உங்களின் இந்த கவிதை என்னை மெய் மறக்கச் செய்தது, ஹஜ்ஜாஜிகளை வாழ்த்தி புகழ்ந்து ஒரு கவியாக்கம், இது படிப்பதற்கு மட்டும் அல்ல, மனதில் நிறுத்திக் கொள்ளவும்தான்.

    மழையே பெய்யாத இந்தக் காலங்களில் நான் உங்களை இன்று முதல் கவிமழை என்றே அழைக்க விரும்புகின்றேன் மச்சான்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. K.m.a jamal kakka avarkalen machchanai pukalvathu adirai kku kedaththa pokkesam

    ReplyDelete
  7. கலாம் காக்கா

    தமிழ் கவிதையில் மட்டுமல்ல

    இவர் ஆங்கிலத்திலும் புலமைவாய்ந்தவர்

    ReplyDelete
  8. ஹாஜிகளுக்கு புனித படைப்பு அருமை கலாம் காக்கா அவர்களே.
    ஜாஃபர் காக்காவின் குரலும் அருமை.

    ReplyDelete
  9. தேன் குரலில்
    பலா சுளைகள்
    செவி வழியில்
    இதயம் இனித்தது.

    ReplyDelete
  10. இக்கவியை கேட்டு, படித்து ரசித்த அனைவருக்கும் நன்றி.. ஜஸாக்கல்லாஹுமுல் கைரன்

    ReplyDelete
  11. இன்ஷா அல்லாஹ் உங்கள் ஆதரவுடந் துஆவினால் தொடர்ந்து எங்கள் கூட்டு முயற்சியால், அதிரையின் மகிமையை அகிலமெலாம் எடுத்துச் செல்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.