.

Pages

Wednesday, April 27, 2016

அஜ்மானில் பூமி நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி !

அஜ்மானில் பூமி நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அஜ்மானில் கிரீன் குளோப் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பூமி நாளையொட்டி மரம் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் மாணவர் அமைப்பின் தலைவர் ஹுமைத் அபுபபக்கர் தலைமை வகித்தார். அவர் பூமி நாள் குறித்தும், மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக வீட்டில் தோட்டங்களை அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஓட்டல் ஒன்றின் தோட்டத்தில் நடைபெற்றது. அந்த ஓட்டல் நிர்வாகிகள் மாணவர்களின் இந்த பணிகளை பாராட்டினர். மிகவும் இளம் வயதில் இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.