.

Pages

Saturday, April 23, 2016

அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் !

அதிராம்பட்டினம் ஏப்-23
தஞ்சை மாவட்டம், அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற தேர்தல் தோற்பான ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு மஜக அதிரை பேரூர் செயலாளர் அஸ்கர் தலைமை வகித்தார் மஜக அதிரை பேரூர் மருத்துவரணி பொறுப்பாளர் சமீர் அஹமது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி சேகர் வெற்றிக்கு அயராது பாடுபடுவது, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர், நாகை  சட்டமன்ற வேட்பாளர் தமீமுன் அன்சாரி அவர்களுக்கு ஆதரவாக அதிரையிலிருந்து தேர்தல் பணி செய்திட 10 பேர் கொண்ட குழு ஸ்மார்ட்  சாகுல் தலைமையில் பணியாற்றுவது. அதிரையில் தண்ணீர் பந்தல் அமைப்பது, ஜும்மா பள்ளிகளில் மோர் விநியோகம், அதிரை அலுவலகத்தில் வரலாற்று நூலகம் அமைப்பது, உறுப்பினர்களுக்கு இரத்த வகை கண்டறிவது, இரத்த தானம் அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் அதிரை உபயா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.