பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது இலியாஸ், தேர்தல் நடத்தும் துணை அலுவலரும், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் டி.எஸ் ராஜசேகரிடம் தனது வேட்புமனுவை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
முன்னதாக தனது கட்சியினருடன் பட்டுக்கோட்டை இரயில் நிலையம் இப்ராஹிம் பள்ளிவாசல் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், மணிக்கூண்டு வழியாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.
இதில் வேட்பாளர் முஹம்மது இலியாஸ் தனிச்செயலர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி, எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக், எஸ்டிபிஐ கட்சி திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.ஏ லத்திப், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேக்தாவூது, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அபுல்ஹசன், பொருளாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.