தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் தாமரங்கோட்டை என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் திரு கல்யாணசுந்தரம் மற்றும் திருமதி கமலா ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் மகேந்திரன்.
சென்னை புதுக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது மாணவர் காங்கிரசில் தென் சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பேற்றார். இவரது சிறந்த கட்சிப்பணியை பாராட்டி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்கள் தேசிய அளவிலான சிறந்த மாவட்ட தலைவருக்கான விருதை வழங்கினார்.
தொடர்ந்து மாநில மாணவர் காங்கிரசின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு கட்சிப்பணியும் மக்கள் பணியும் செய்து வந்த மகேந்திரன், 2007ல் ராகுல் காந்தி அவர்களால் தமிழக மாநில இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2009 ல் நடைபெற்ற காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு இளைஞரணிக்கான பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தேசிய இளைஞர் காங்கிரசின் செயலாளராக 2010 ஆகஸ்டில் மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.