.

Pages

Friday, April 22, 2016

பட்டா மாறுதல் செய்து தராமல் அலைக்கழிப்பு குடிநீர், மின்சார இணைப்பு பெற முடியாமல் பொதுமக்கள் அவதி

பட்டுக்கோட்டை நகரில் பட்டா மாறுதல் உத்தரவு தராமல் அலைக்கழிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பட்டுக்கோட்டை பெரிய கடைவீதியில் நகர நில அளவைத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் புதிய உட்பிரிவு, பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள பலர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பட்டா மாறுதல் உத்தரவு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நகர நல முன்னணி என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர். அவ்வமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் அருண்மொழி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜசேகரன் வரவேற்றார்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை நகர நில அளவைத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல், புதிய உட்பிரிவு கேட்டு மனுச் செய்துள்ள நூற்றுக்கணக்கானோர் 6 மாதங்களுக்கு மேலாகியும் பட்டா மாற்றல் உத்தரவு கிடைக்காததால் வங்கிக்கடன், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம் போன்றவற்றைப் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை கேட்டும் உரிய நடவடிக்கை இல்லை என்பதுடன், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த அதிகாரி பொதுமக்களை தேவையின்றி அலைக்கழித்து வருகிறார்.

எனவே, இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லாவிடில் நகர நில அளவைத் திட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பின் சார்பில் உண்ணாவிரதம், தர்னா போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் நகல் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி:தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.