.

Pages

Thursday, April 21, 2016

வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்,சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித தலைவர் தெரிவித்தாவது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத்தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால்  அனைத்து சட்டமன்ற தொகுதி தலைமையிடங்களில் மட்டும் பெறவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதால். வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்,சுப்பையன். இ,ஆ,ப,. அவர்களால் இன்று 2,004,2016 காலை 11,00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அனைத்து அங்கீகாpக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது,

22-04-2016 முதல் 29-04-2016 முடிய உள்ள அனைத்து அலுவலக நாட்களிலும் (24,04,2016 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11,00 மணி முதல் மாலை 03,00 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம், வேட்பு மனுக்களை அந்தந்த சட்டமன்ற தொகுதி தலைமையிடத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யப்படவேண்டும், வேட்பு மனு தாக்கல் செய்பவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும், 25 வயது நிறைவு பெற்றவராக இருத்தல் வேண்டும், வேட்பு மனுக்கள் படிவம் 2B ல் தாக்கம் செய்யப்படவேண்டும்,

தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாகவோ அல்லது Notary Public, First Class Magistrate அல்லது Commissioner of Oath முன்பாக பிரமான வாக்குமு்லம் எடுத்துக்கொள்ள வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பொறுத்தமட்டில் அக்கட்சிகளால் வழங்கப்பட்ட படிவம் A & B தாக்கல் செய்யப்படவேண்டும்,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பொறுத்தமட்டில். ஒரு வாக்காளரால் முன்மொழியப்படவேண்டும், சுயேட்சை வேட்பாளர்களை பொறுத்தமட்டில் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியிலுள்ள 10 வாக்காளர்களால் முன்மொழியப்படவேண்டும், முன்மொழிவு செய்யும் வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC ) இருப்பது அவசியம்

வேட்பாளர்கள் காப்புத்தொகையாக (Deposit) ரு்,10.000-/ செலுத்தப்படவேண்டும், தாழ்த்தப்பட்ட - பழங்குடியின வேட்பாளர்கள் காப்புத்தொகையாக ரு்,5000-/ செலுத்தப்படவேண்டும், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் வேறு ஒரு தொகுதி வாக்காளர் பட்டியலில் இருப்பின். அத்தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து சான்றிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல் தாக்கல் செய்யப்படவேண்டும்,

படிவம் 26 (ஆணை உறுதி ஆவணம்)ல் உள்ள அனைத்து கலங்களும் விடுதலின்றி பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும், வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வேட்பாளர் உட்பட ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தூரம் வரை மு்ன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும், வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள்  அலைபேசி (Mobile) கொண்டு வர அனுமதியில்லை,

கூடுதல் ஆணை உறுதி ஆவணம் ரு்,20-/ மதிப்புள்ள முத்திரைத்தாளில் தயார் செய்யப்படவேண்டும், மேற்படி கூடுதல் ஆணை உறுதி ஆவணம் Notary Public, First Class Magistrate அல்லது Commissioner of Oath அவர்கள் முன்பாக பிரமான வாக்குமு்லம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், மின்சாரம். குடிநீர் மற்றும் அரசு குடியிருப்பு வாடகை கேட்பு ஏதுமில்லை என்பதற்கான சான்று (Nடி னுநஅயனே ஊநசவகைiஉயவந) தாக்கல் செய்யப்படவேண்டும்,

வேட்பாளரின் வண்ண-கருப்பு வெள்ளை புகைப்படம் (2cm x 2.5cm  ) (வெள்ளை நிற பின்புலத்துடன்) 5 எண்ணிக்கை தாக்கல் செய்யவேண்டும், தொப்பி அல்லது கருப்பு கண்ணாடி அணிந்திருத்தல் கூடாது, மேற்படி புகைப்படம் 3 மாத காலத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும், புகைப்படம் தாக்கல் செய்யத்தேவையான உறுதிமொழி உரியப்படிவத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளன்றே தாக்கல் செய்யப்படவேண்டும்,

வேட்பாளர் ஏதாவதொரு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவராக இருத்தல் கூடாது, வேட்பாளர். இந்திய தேர்தல் ஆணையத்தால் தகுதிநீக்கம் ( disqualified ) செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது,

தேர்தல் செலவுக்கென தனியே ஓர் வங்கி கணக்கு துவக்கி அதன் விவரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்திட வேண்டும், மேற்படி வங்கிக்கணக்கு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு குறைந்த பட்சம் ஒரு நாள் முன்னதாக தொடங்கப்பட்டிருக்கவேண்டும்,

தாழ்த்தப்பட்ட - பழங்குடியினருக்கான சலுகை பெற விரும்புவோர் அதற்கான சான்றினை உரிய அலுவலர்களிடம் பெற்று தாக்கல் செய்யப்படவேண்டும், வேட்பு மனுவுடன் இணைக்கப்படவேண்டிய சான்று ஆவணங்கள் விடுபட்டிருப்பின் அவற்றை 29-04-2016 பிற்பகல் 3.00 மணிக்குள் தாக்கல் செய்யப்படவேண்டும், தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு வேட்பு மனுவிற்கும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்,சுப்பையன். அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ,சந்திரசேகரன். கும்பகோணம் சார் ஆட்சியர் திரு,ம,கோவிந்தராவ். பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் திரு,டி,எஸ், ராஜசேகர். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் திரு,ஜெய்பீம் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.