.

Pages

Saturday, April 16, 2016

முத்துப்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி !

முத்துப்பேட்டை அடுத்த மேல நம்மங்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னையன் மகன் சேகர்(44), விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு சன்மூகவள்ளி என்ற மனைவியும் சத்தியா(12), சந்தியா(7) என்ற இரு குழந்தைகள் உள்ளன இந்தநிலையில் சேகர் நேற்று மாலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருகில் உள்ள கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து விட்டு அப்பகுதியில் உள்ள சின்னவெள்ளகுளத்தில் சேகர் குளித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது நீந்து குளம் நடுபகுதிக்கு அவர் சென்றபோது ஆலத்தில் நீரில் மூழ்கினர் இதனை கண்ட அப்பகுதினர் சேகரை காப்பாற்ற முயன்றனர் முடியவில்லை. பின்னர் நீரில் மூழ்கிய சேகரின் உடலை மிக்க முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கும் அப்பகுதினர் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்துக்குள் இறங்கி இரவில் நீண்ட நேரம் போரடி சேகரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் முத்துப்பேட்டை போலீசார் சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் விவசாய கூலி தொழிலாளியான சேகர் குளத்தில் விழுந்து பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேகரின் உடலை குளத்திலிருந்து மீட்கும் நேரத்தில் சேகரின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் கதறி அழுத சம்பவம் பரிதாபமாக இருந்தது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.