.

Pages

Tuesday, April 12, 2016

முதியவருக்காக ஓடு பாதையில் விமானம் திடீர் நிறுத்தம்!

முதியவர் ஒருவரின் தேவைக்காக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு Etihad Airways என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் வயதான தம்பதி இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில், ஓடுத்தளத்தில் விமானம் சென்றுக்கொண்டு இருந்தபோது அந்த வயதான தம்பதிக்கு திடீரென குறுஞ்செய்தி(SMS) வந்துள்ளது.

அதில், அவர்களுடைய பேரன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனே மருத்துவமனைக்கு வருமாறு செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இந்த தகவலை கண்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் உடனடியாக விமானக் குழுவினருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

விமானத்தை மேலே எழுப்ப இருந்த விமானிகளிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், கண நேரமும் சிந்திக்காமல் விமானத்தை மேலே எழுப்புவதை தவிர்த்துவிட்டு விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே திருப்பி கொண்டு வந்துள்ளனர். தம்பதி உடனடியாக விமானத்திலிருந்து இறக்கிவிட்டு விமான பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

உரிய நேரத்தில் செயல்பட்டு முதியவரின் தேவை உணர்ந்து விமானத்தை நிறுத்திய விமானிகளை பயணிகள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.