.

Pages

Saturday, April 16, 2016

உற்சாக குளியலுக்காக செடியன் குளத்திற்கு படையெடுக்கும் பள்ளிச்சிறுவர்கள் !

அதிராம்பட்டினம் ஏப்-16
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் வரலாற்று பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவை கொண்ட இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் நீராடவும், ஆடு மாடு, பறவைகள் நீர் அருந்தி செல்லவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படுகிறது.

கடந்த வருடம் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் மட்டம் நிரம்பி வழியும் நிலையில் உயர்ந்தது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த சாதி, மத, இன பேதமின்றி தினமும் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்து வருகின்றனர். குளத்தில் பெண்கள் குளிப்பதற்காக தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பிரத்தியோக கரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விடுமுறை தினங்களில் குளத்தில் குளிக்க பள்ளி சிறுவர்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.  தினமும் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உற்சாகமாக டைவ் அடித்தும், நீந்தியும் குளித்து வருகின்றனர். இதனால் செடியன் குளம் காலை நேரங்களில் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.