தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் வரலாற்று பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவை கொண்ட இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் நீராடவும், ஆடு மாடு, பறவைகள் நீர் அருந்தி செல்லவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படுகிறது.
கடந்த வருடம் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் மட்டம் நிரம்பி வழியும் நிலையில் உயர்ந்தது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த சாதி, மத, இன பேதமின்றி தினமும் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்து வருகின்றனர். குளத்தில் பெண்கள் குளிப்பதற்காக தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பிரத்தியோக கரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விடுமுறை தினங்களில் குளத்தில் குளிக்க பள்ளி சிறுவர்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. தினமும் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உற்சாகமாக டைவ் அடித்தும், நீந்தியும் குளித்து வருகின்றனர். இதனால் செடியன் குளம் காலை நேரங்களில் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
best of use in adirai poors
ReplyDelete