அதிராம்பட்டினம் ஏப்-20
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருவதால் உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவை இந்திய உப்புத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமானதாகும்.
ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி செய்வதற்கு முதல் கட்டப்பணிகள் துவங்கியது. பாத்தி கட்டுதல், பாத்தி சீர்அமைத்தல், பாத்தி மிதித்தல், கட்டை போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல், கடல் வாய்க்கால் வண்டல் அகற்றுதல், கடல் முகத்துவாரம் சீர் அமைத்தல், கடல் நீரை பத்தியில் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்து தற்போது உப்பு வாரும் பணிகளில் உப்பள தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதால் பாத்தியில் உள்ள உப்பு ஐஸ் கட்டிகள் போல் காட்சி தருகிறது. உப்பள தொழிலாளர்கள் பெரும் சிரமத்துடன் உப்பை வாரி வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருவதால் உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவை இந்திய உப்புத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமானதாகும்.
ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி செய்வதற்கு முதல் கட்டப்பணிகள் துவங்கியது. பாத்தி கட்டுதல், பாத்தி சீர்அமைத்தல், பாத்தி மிதித்தல், கட்டை போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல், கடல் வாய்க்கால் வண்டல் அகற்றுதல், கடல் முகத்துவாரம் சீர் அமைத்தல், கடல் நீரை பத்தியில் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்து தற்போது உப்பு வாரும் பணிகளில் உப்பள தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதால் பாத்தியில் உள்ள உப்பு ஐஸ் கட்டிகள் போல் காட்சி தருகிறது. உப்பள தொழிலாளர்கள் பெரும் சிரமத்துடன் உப்பை வாரி வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.