கூட்ட முடிவில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவது, அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பது, அதிராம்பட்டினம் அனைத்து ஜமாஅத் பிரமுகர்கள், கிராம பஞ்சயாத்தார்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து ஆதரவு கோருவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், திமுக அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், சைஃபுதீன், நூர்லாட்ஜ் செய்யது, பசூல்கான், முஹம்மது யூசுப் மற்றும் ஜமாஅத் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅன்று 1965-களில் எனக்கு பம்பரம், பளிங்கு, கிளித்தட்டு, தொட்டு விளையாடு, லாக்கு, போன்ற அனேக விளையாட்டுக்களை விளையாடும் வயசு,
அன்றைய அசைக்க முடியாத சேர்மன் என்று பேர் போனவர் உங்கள் எல்லோருக்கும் தெரியும், அவர் வீட்டு (மர்ஹூம்) அஹமது தம்பி அவர்களின் திருமணம்.
செக்கடித் தெரு,
அப்போது அங்கே தென்னங் கீற்றுப் பந்தல்,
தேங்காய்க் குலைகள்,
வாழைமரத் தோரணங்கள்,
தென்னங் கீற்றேல்லாம் வண்ணங்களால் பூசப்பட்டிருந்தது.
அன்றே அது வெரி பவர்புல் கல்யாணமாக இருந்தது. வெகு சிறப்பாக முடிந்தது.
அதிரை வெகுவாக குளுமையாக இருந்தது. அதிரை மக்களும் ரொம்பவே குளிர்ச்சியாக இருந்தார்கள்.
இன்றைய அதிரையர்கள் எதையோ திருட்டு கொடுத்த மாதிரி அங்கும் இங்கும் அலைகின்றனர். இதெற்கெல்லாம் என்ன காரணம்?
ஷிர்க்கு மட்டும் ஒழிந்தால் போதுமா?
மனதில் உள்ள கருங் கசடும் சேர்ந்தே ஒழியனும்.
என்றைக்கு கசடு ஒழிகின்றதோ அன்றைக்கே......................?
K.M.A. Jamal Mohamed.
President – PKT Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive Member
Adirampattinam-614701.