.

Pages

Sunday, April 17, 2016

நாளை ஏப் 18 ந் தேதி உள்ளூர் விடுமுறை: கல்வி நிறுவனங்கள் - அரசு அலுவலகங்கள் இயங்காது !

தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழாவினை முன்னிட்டு 18-04-2016 அன்று திங்கள் கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ( பள்ளிகள் மற்றும் கல்லுரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ) உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.

இவ்வுள்ளுர் விடுமுறையானது 2016 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எவ்விதமான பத்திரிகை செய்தியோ. விளம்பரங்களோ. அரசியல் சார்ந்த மேடைப்பேச்சுக்களோ. விமர்சனங்களோ. அறிவிப்புகளோ எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையுடன் அறிவிக்கப்படுகிறது, மேலும் இந்த உள்ளுர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 14 ம் தேதி (14-05-2016) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும். பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளுர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.