அதிராம்பட்டினம் ஏப்-16
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி இவரது மகன் அப்துல் வாஹிது ( வயது 17 ). திருச்சியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜூடோ விளையாட்டில் அதிக ஆர்வமாக விளையாடி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தோ - நேப்பால் ஊரக விளையாட்டு போட்டி, ஏப்ரல் 11ல், காட்மாண்டுவில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். ஜூடோ போட்டியில் மாணவன் அப்துல் வாஹிது கலந்துகொண்டு விளையாடினார். போட்டியில் வெற்றி பெற்று ஆசியா ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமுமுக நிர்வாகிகள் ஆசிய ஜூடோ போட்டிக்கு விளையாட தகுதி பெற்ற மாணவன் அப்துல் வாஹிதை அதிரை அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலளார் அஹமது ஹாஜா, தமுமுக அதிரை பேரூர் பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச்செயலாளர் கமாலுதீன், அமீரக ஷார்ஜா மண்டல பொறுப்பாளர் மன்சூர், சேக் நசுருதீன், நியாஸ் அஹமது, இப்ராஹிம்ஷா உள்ளிட்ட தமுமுகவினர் இருந்தனர்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி இவரது மகன் அப்துல் வாஹிது ( வயது 17 ). திருச்சியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜூடோ விளையாட்டில் அதிக ஆர்வமாக விளையாடி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தோ - நேப்பால் ஊரக விளையாட்டு போட்டி, ஏப்ரல் 11ல், காட்மாண்டுவில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். ஜூடோ போட்டியில் மாணவன் அப்துல் வாஹிது கலந்துகொண்டு விளையாடினார். போட்டியில் வெற்றி பெற்று ஆசியா ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமுமுக நிர்வாகிகள் ஆசிய ஜூடோ போட்டிக்கு விளையாட தகுதி பெற்ற மாணவன் அப்துல் வாஹிதை அதிரை அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலளார் அஹமது ஹாஜா, தமுமுக அதிரை பேரூர் பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச்செயலாளர் கமாலுதீன், அமீரக ஷார்ஜா மண்டல பொறுப்பாளர் மன்சூர், சேக் நசுருதீன், நியாஸ் அஹமது, இப்ராஹிம்ஷா உள்ளிட்ட தமுமுகவினர் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.