.

Pages

Wednesday, February 6, 2013

[ 3 ] டீக்கடை சந்திப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னா சலீம் சவ்க்கியமா..? என்னா ஆச்சி பைக்க தள்ளி கிட்டு போறீங்க..! பஞ்சரா..?

வ அலைக்கும் சலாம், நல்லா இருக்கேன் சாதிக் 
அத ஏன் கேக்குறீங்க அர்ஜண்டா பேங்குக்கு போய் கிட்டு இருக்கிறேன் இப்போ பாத்து பஞ்சரா போய்டிச்சி..! என்னா பன்றதுண்டு ஒன்னும் புரியல.

கவலப்படாதீங்க சலீம். நானும் வர்றேன். பக்கத்துல தான் மெக்கானிக்கு கடை இருக்கு. போய் பஞ்சர் ஒட்ட கொடுத்துட்டு அவர்ட்டயே வேற பழைய வண்டி இருந்தா வாங்கிட்டு போயிட்டு வந்துடலாம். சரி உங்கட புது பைக்குல எப்புடி பஞ்சரா போனிச்சி..?

எல்லாம் இந்த ரோட்டுனாலேயே வண்டி வீனாபோச்சி சாதிக். நம்ம மெய்ன் ரோட்டுலேந்து மகிழன்கொட்ட போற வரைக்கும் உள்ள இந்த ரோட சரி பண்ணாமே இப்புடியே போட்டுட்டாங்க கிராணி மளிக கடைக்கிட்ட ரொம்ப மோசமா இருக்கு. நம்ம பெரிய ஜும்மா பள்ளி விலாவு பக்கம் போற ரோடும் ரொம்ப மோசமா இருக்கு. நேத்து கூட ஒரு பையன் பைக்க கல்லுல உட்டு ஏத்தி கீழ உளுந்து நல்லா அடிபட்டு போனிச்சி.அப்புறம் சொல்லப்போனா தம்பி மளிகை கிட்டயும் பள்ளமும் படு குழியுமா கெடக்குது.

இப்போ தம்பி மளிகை கிட்டதான் என்னட பைக்கும் பஞ்சரா போனிச்சி. இத்துண ஆளுவோ நம்ம ஊர்ல இருந்தும் புகார் கொடுத்து யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்குற மாதிரி தெரியல..!

ஏற்கனவே நம்ம எம் எல் ஏ கிட்ட போய் சொல்லி தான் இருக்குறாங்க சலீம். இப்போ கீழத்தெரு மஹல்லா சார்பாக மனு எழுதி நேர்லயே எம் எல் ஏ ட்டயும், ஊராட்சி ஒன்றிய தலைவர்ட்டையும் போய் கொடுத்து புட்டு வந்திருக்கிறாங்க.அநேகமா கூடிய சீக்கிரமா ரோடு போட ஏற்பாடு செய்வாங்கன்டு நெனக்கிறேன். இந்த ரோட்ட போட்டுட்டா எல்லாத்துக்கும் நல்லது. எப்பொ இந்த வேலையே தொடங்க போராங்கண்டு தெரியல. பாக்கலாம்..!

அப்பறம் சாதிக் உங்ககிட்ட சந்தோசமான செய்தி ஒன்னு சொல்லலாமுண்டு இருந்தேன். இப்பதான் ஞாபகத்துல வந்திச்சி. நம்ம ஊரு செய்திதான் நம்ம ஊரு போவ போவ முன்னேற்றம் அடஞ்சிக்கிடே போவுதுண்டுதான் சொல்லணும்.

அப்புடி யன்னா சந்தோசமான செய்தி சலீம். முடிச்சிபோட்டுக்கிட்டு போவாமே ஞாபகம் வந்ததோட சொல்லிடுங்க. இல்லாட்டி அதயே நெனச்சி எனக்கு தல வெடிச்சி போய்டும்.

இதுக்கு மேலயும் சொல்லாமே இருந்தா திட்டிப்புடுவீங்க சாதிக். . சொல்லிடறேன். நம்ம ஊர்ல பொருட்காட்சி வருவதாக கேள்விப்பட்டேன். அதுவும் நல்ல விசேசமா நடக்க போவுதாம். நம்ம காதிர் முகைதீன் மேல்நிலை பள்ளி மைதானத்துல தான் எடம் கொடுக்குறாங்களாம். இப்புடி வருசத்துக்கு ரெண்டு மூணு வாட்டி எதாச்சும் கண்காட்சி, பொருட்காட்சின்டு ஏற்பாடு பண்ணுனா நல்லா இருக்கும். அனாச்சார கலாச்சாரத்துலேந்து மாற்ற ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.வூட்டுலேயே அடைஞ்சி கெடக்குற போம்புளையளுக்கும் கொஞ்சம் பொழுது போக்காகவும் இருக்கும்.நீங்க என்னா நெனக்கிறீங்க..?

நீங்க சொல்றது சரிதான் சலீம். பட்டுக்கோட்டைல போடுற மாதிரி நம்ம ஊர்லயும் அடிக்கடி பொருட்காட்சி கண்காட்சி நடந்தா வெளியூருக்கு போறது கொஞ்சம் குறையும். அனால் எந்த அனாச்சாரமும் நடக்காம கண்காணிக்க ஏற்பாடு செய்யணும். இதெ தொடர்ந்து நடத்திவந்தா கந்துரிக்கடக்கி போற கூட்டம் எல்லாம் இங்கே வந்துடுவாங்கண்டு சொல்லுங்க.

அப்பறம் இன்னொரு செய்தி கேள்விப்பட்டியலா சாதிக். நம்ம ராஜாமடம் போற ரோட்டுல கேட்டுவாசல் கிட்டே அடிக்கடி ஆக்சிடன்ட்டு நடக்குதுல 
அப்புடியா சலீம்... அந்த கேட் ரோட்ட அவசியம் சரி பண்ணனும். ரெண்டு ரோடா பிரிஞ்சி இருக்குறது தெரியாம வெளியூர்லேந்து வாகனம் ஓட்டிக்கிட்டு வர்றவங்க அந்த கேட்ல மோதி அநியாயத்துக்கு ரெண்டு மூணு பேரு செத்து இருக்காங்க. அப்பறம் உள்ளூர் காரவங்களுக்கும் பைக்குல மறதியா இந்த ரோட்டு பக்கமா போய் ஆக்சிடன்ட் ஆயி கை காலு முறிஞ்சி போய் இருக்கு. புதுசா போட்ட ரோட்ட திறந்து பழைய ரோட்ட மூடிட்டா இப்புடி அடிக்கடி விபத்து நடக்காது. அதுக்கு பொது மக்கள் தான் நடவடிக்கே எடுக்கணும். ஆனா சகோதரர் தனி மனிதனா முயற்சி எடுக்குறாரே நிச்சயமா நம்ம எல்லோரும் அவர பாராட்டனும்.

நீங்க சொல்றது சரிதான் சாதிக். இந்த காலத்துலெ பொது நலன்லெ அக்கறையா யாரு செயல் படுறாங்க. எல்லாரு அவங்க அவங்க வேலையைத்தானே பாத்துகிட்டு போறாங்க. நூத்தூலெ ஒரு மனுஷன் தான் இந்த மாதிரி எறங்கி சமூக சேவை செஞ்சிகிட்டு இருக்காங்க. இந்த மாதிரி ஆளுகலெ நாம தான் ஊக்கப்படுத்தணும்.

நீங்க ஒன்னு சலீம். நம்ம ஊர்ல என்னத்த நல்லது செஞ்சாலும் பின்னாடி கொர சொல்லத்தான் ஆள் இருக்கும். அனால் இப்பொ உள்ள இளைய தலைமுறைங்க விழிப்புடனே செயல் படறாங்க. பழைய நம்ம காலம் மாதிரி இல்லே.

சரி சாதிக்கு. நம்ம சின்ன வயசு கூட்டாளி கமாலு வாக்கிங் போலாம்ண்டு கூப்பிட்டான். எனக்கு வெய்ட் பண்ணிக்கிட்டு நிப்பான். நா போயிட்டு வர்றேன். இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.

அதிரை மெய்சா
myshaadirai@rediffmail.com

4 comments:

  1. அருமையான பதிவு அது போல் நமதூரின் உள்ள ரோடு பற்றி விளக்ககள் அருமை.

    ReplyDelete
  2. புதிய ரோடு போட்டாக்கா நம்ம புள்ளைங்க ஹைவேயிலே போறதா நினைச்சு ஹை ஸ்பீடு போறாங்க; குழந்தைங்க, பெரியவங்க போறதைப் பார்க்காம போறாங்க

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    சாலைகள் ஒழுங்காக சீராக இருந்தால் வாகனப் பஞ்சர் குறைந்து காணப்படும், என்ன செய்வது? நம்ம சைடு ரோடுகளேல்லாம் ஓனான் முதுகு மாதிரி இருக்கும் அப்புறம் என்ன? கச்சேரிதான்.

    அருமையான ஆக்கம்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. சாலைகள் ஒழுங்காக சீராக இருந்தால் வாகனப் பஞ்சர் குறைந்து போகும்.ஆனால் வாகனத்தில் செல்பவர்கள் நடந்து செல்பவர்களையோ அல்லது தங்களை தானே பஞ்சர் செய்து கொள்கிறார்களே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.