.

Pages

Wednesday, February 27, 2013

அதிரையில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்பட்டது !

அதிரை முத்தம்மாள் தெரு, MSM நகர், ஷப்னம் லேன், KSA லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் ஆகிய பகுதிகளோடு காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரைஸ் மில் மற்றும் சேது பெருவழிச்சாலையில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு, முத்தம்மாள் தெரு எதிரே இருக்கின்ற டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தன.

இந்த டிரான்ஸ்பார்மரில் கூடுதல் இணைப்பின் காரணமாக அடிக்கடி பழுதடைந்தது விடுகிறது. மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் எற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பிரச்சனை தொடர்பாக 'மனித உரிமைக்காவலர்' KMA ஜமால் முஹம்மது அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற உடன் சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர்களை வரவழைத்து பழுதை சரி செய்வதற்குரிய முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர நடவடிக்கையாக இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள கூடுதல் இணைப்புகளை பிரித்து புதிதாக மற்றுமொரு டிரான்ஸ்பார்மர் அதே பகுதியில் பொறுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருந்தாலும் தற்காலிக நடவடிக்கையாக இன்று மாற்று டிரான்ஸ்பார்மர் அதில் பொறுத்திருப்பது இந்தப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சற்று மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது.

இந்தப்பணிகள் முழுமையடைவதற்காக இன்று பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை பிலால் நகர், முத்தம்மாள் தெரு, MSM நகர், ஷப்னம் லேன், KSA லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பல மணி நேர மின்வெட்டால் அதிரை மக்கள் அவதி :
அதிரையில் நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மீண்டும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, இரவு 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை மின் துண்டிப்பு அமலில் உள்ளது. இதனால் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளதையொட்டி மாணவர்கள் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் விநியோகத்திலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

5 comments:

  1. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    இதுபோல் எங்கள் தெரு சாணாவயலில் உள்ள மின் கம்பம் முறிந்து விழும் நிலையில் அபாயகரமாக நிற்கிறது. இதே அதிரை நியூஸ்சில் படத்துடன் பதிவாய் பதிந்து வெளியிட்டும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். தயவு செய்து இதையும் மின்சாரத்துறையின் பார்வைக்கு எடுத்துச்சென்று மாற்று மின்கம்பத்திற்கு ஏற்ப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    கடந்த வாரம் மின் துரையின் சார்பாக மேலே குறிப்பிட்ட மின் கம்பத்தை ஆய்வு செய்தாகிவிட்டது, அது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, இன்னும் சில தினங்களில் மாற்றி அமைக்கப்படும், இது உறுதி.

    அடுத்தபடியாக நமதூரில் ஏகப்பட்ட இடங்களில் புதியதாக மின் மாற்றிகளை அமைக்கவேண்டும், அப்போதுதான் கூடுதலான மின் பளுவிலிருந்து தப்பிக்க முடியும். இந்த மின்பளுவினால் அடிக்கடி பியூஸ் போவதும் அதனால் பொதுமக்கள் அவதிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

    எல்லா விஷயங்களையும் மின் வாரிய துறைக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா வேலைகளும் காலக்கிரமத்தில் நடந்தேரிவிடும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. மின்சாரவாரியத்துக்கு நன்றி .

    ReplyDelete
  5. மின்சாரவாரியத்துக்கும் மற்றும் இதற்க்கு பெரும் முயற்சி செய்த அணைத்து சகோதர்கள்ளுகும் நன்றியும் வாழ்த்தும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.