அதிரை தக்வா பள்ளி அருகில் இன்று [ 10-02-2013 ] மாலை 6.30 மணியளவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் S.M. பாக்கர் அவர்கள் கலந்துகொண்டு "நீதி கேட்டு நெடும் பயணம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
கூடுதல் இட ஒதுக்கீடு, வக்பு சொத்துக்கள் மீட்டெடுப்பு, பாபர் மஸ்ஜீத் வழக்கு விரைந்து முடித்தல், இஸ்லாமிய திருமண பதிவு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்ட இந்த கூட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் நாச்சியார் கோவில் ஜாஃபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நகரத் தலைவர் M.R. கமாலுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். பெரும்பாலான பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் உதவி : www.adiraiclassifieds.com
கூட்டதில் கலந்துகொண்ட நமதூர் மக்களுக்கு நன்றிகள்...
ReplyDelete