.

Pages

Monday, February 11, 2013

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிரையில் நீதி கேட்டு பொதுக்கூட்டம் !

அதிரை தக்வா பள்ளி அருகில் இன்று [ 10-02-2013 ] மாலை 6.30 மணியளவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் S.M. பாக்கர் அவர்கள் கலந்துகொண்டு  "நீதி கேட்டு நெடும் பயணம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


கூடுதல் இட ஒதுக்கீடு, வக்பு சொத்துக்கள் மீட்டெடுப்பு, பாபர் மஸ்ஜீத் வழக்கு விரைந்து முடித்தல், இஸ்லாமிய திருமண பதிவு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்ட இந்த கூட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் நாச்சியார் கோவில் ஜாஃபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

கூட்டத்தின் இறுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நகரத் தலைவர் M.R. கமாலுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். பெரும்பாலான பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் உதவி  : www.adiraiclassifieds.com

1 comment:

  1. கூட்டதில் கலந்துகொண்ட நமதூர் மக்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.