.

Pages

Friday, February 1, 2013

அதிரையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்ட நிகழ்ச்சி !

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்ட நிகழ்ச்சி நமதூர் காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் இன்று இரவு 9.30 மணியளவில் சிறப்பாக துவங்கியது.

முதல் ஆட்டத்தை அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலக்கண்ணன், கீழத்தெரு மஹல்லா அமீர கிளையின் துணைத்தலைவர் சிஹாப்தீன் மற்றும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சேக் அலாவுதீன்,அஜ்மல்கான், அமீர் பாட்சா, அமானுல்லா [ சேட்டு ] ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நமதூரைச் சார்ந்த இரு அணிகள மோதிய முதல் ஆட்டத்தை பார்வையாளராக கலந்துகொண்ட ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மின்னொளியில் இரவு ஆட்டமாக இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கின்ற போட்டிகளில் பல்வேறு ஊர்களைச் சார்ந்த அணிகள் ஆட இருக்கின்றனர். நாளை நடைபெற இருக்கின்ற இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ள இருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


5 comments:

  1. இது நமதூர் காட்டுப்பள்ளி மைதானமா..???

    அருமையாக சுட்டு இருக்கிறது அதிரை நியூஸ்சின் கேமராக்கோணம்.

    நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாலிபால் விளையாடும்
    வாலிபர்கட்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    நேரம் நேரமாகிவிட்டால் என்னால் போய் பார்கமுடியவில்லை, இருந்தாலும் நம்ம அதிரை செய்தி இருக்குதே என்ற தைரியம்தான்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 5வது மின்னொளி கைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற, கீழத்தெரு மஹல்லா அமீர கிளையின் சார்பாக என் வாழ்த்துகள் !!!!!!!

    பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  5. ***** எங்கள் அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 5வது மின்னொளி கைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற, அமீர அதிரை கீழத்தெரு மஹல்லா கிளையின் சார்பாக எங்கள் நல் வாழ்த்துகள் !!!!!!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.