கேபிள் ஆபரேட்டர்கள், அரசு அறிவித்த தொகைக்கு அதிகமாக, ஒரு இணைப்பிற்கு, 100 ரூபாய் பெற்று வருகின்றனர். இதை, கேபிள், டிவி நிர்வாகத்தால், கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், தங்களிடம் உள்ள இணைப்புக்களை கணக்கில் காட்டாமல், குறைந்த எண்ணிக்கையிலான இணைப்புக்களே, தங்களிடம் உள்ளதாக கூறி, அரசு கேபிள், டிவி நிர்வாகத்திற்கு, இழப்பு ஏற்படும் வகையில், மாத தொகையை குறைவாகவே செலுத்தி வருகின்றனர்.
கேபிள் டிவி இணைப்பு குறித்து கணக்கெடுக்கும்படி ரேஷன் ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் இதற்கான படிவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம், படிவத்தை கொடுத்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த படிவத்தில், குடும்ப தலைவரின் பெயர், முகவரி, கேபிள் இணைப்பு உள்ளது என்றால் அந்த ஆபரேட்டரின் பெயர் மற்றும் முகவரி, டிடிஎச் இணைப்பு உள்ளதா, மாதாந்திர கேபிள் கட்டணம் எவ்வளவு? எத்தனை சேனல்கள் தெரிகிறது ? சேனல்கள் தெளிவாக தெரிகிறதா என்பது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
பயனுள்ள செய்தி.
ReplyDeleteஅறியத்தந்தமைக்கு நன்றி.
எங்களைப்போல் தாயகத்தை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்களுக்கு ஊர் செய்தியை உடனுக்குடன் பதிந்து ஊரில் இருக்கும் உணர்வை ஏற்ப்படுத்தி வரும் அதிரை நியூஸ்சிற்கு
நெஞ்சம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்..!
பதிவுக்கு நன்றி்.
ReplyDeleteபயனுள்ள தகவல்.
இதிலும் முறைகேடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளனும்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
இந்த படிவத்தை யார் யார் வீட்டில் கேபிள் டிவி இணைப்பு உள்ளது என்று பார்த்து வீடுவீடாக கொடுத்தால் இன்னும் நல்லது.
ReplyDelete