.

Pages

Sunday, February 10, 2013

பூமியைத் தாக்க வருகிறதா !? சூரியப் புயல் !

              
சூரியனில் இருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கலாம் என லண்டன் "ராயல் அகடமி ஆப் இன்ஜினியரிங்´ விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர் இதனால் செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சூரியனால் உமிழப்படும் துகள்கள் ஒன்று சேர்ந்து இந்த புயல் உருவாகிறது என்றும், டன் கணக்கில் உமிழப்படும் இந்தத் துகள்கள், மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர்  வேகத்துடன் பூமியை நோக்கி வரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதுடன், இந்த புயல் தோன்றுவதற்கு 30 நிமிடங்களுக்குமுன் தான், அது உருவானது பற்றி அறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் இந்த பெரிய புயல், 1859ஆம் ஆண்டு பூமியை தாக்கியுள்ளதாகவும், கனடாவில், 1989ஆம் ஆண்டு சிறிய அளவிலான புயல் ஒன்று தாக்கியதில், மின் தொகுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் மின் வெட்டு ஏற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Thanks : ilankainet.com 

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    சூரியப்புயல் தாக்குதோ இல்லையோ, அதிரைநியுஸின் செய்திப்புயல் இடைவிடாமல் எல்லோரையும் தாக்கிக் கொண்டே இருக்கும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. புயல் அடித்தாழை தாங்க இயலாது இதில் புதியதாக ஒரு சூரியப்புயலா? அல்லாஹுத்தான் எல்லா மக்களையும் காபத்தணும் ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.