அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு தேசிய மற்றும் மாநில அளவிலான கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்விற்கான [ NET , SET ] பயிற்சி முகாம் கல்லூரிச் செயலர் ஹாஜி கே.எஸ். சரபுதீன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
இவ்விழாவில் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் ஏ.எம். உதுமான் முகைதீன் வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தலைமையுறையாற்றினார். விழாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வேதியியல் துறை தலைவர் முனைவர் எம். ஐ. பஜல் முஹம்மது அவர்களும், பேராசிரியர் எம். செய்யது அலி பாதுஷா அவர்களும் தேர்விற்கு எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றி விரிவாக விளக்கினார்கள்.
விழாவில் பேராசிரிய, பேராசிரியைகள், அலுவலக, ஆய்வக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக முனைவர். மேஜர் பி. கணபதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
பயனுள்ள தகவல்.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
அதிரையின் நியூஸ் அதிரடியாக பதித்தமைக்கு நன்றி.
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteஅருமையான நிகழ்வு
மாணாக்கர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திய விதம் அருமை. இந்த நிகழ்ச்சியை காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்த கல்லூரித் தாளாளர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் இதர பேராசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்....
தொடரட்டும் தங்களின் நற்சேவைகள் என்றென்றும்...