.

Pages

Thursday, February 14, 2013

அதிரை பிலால் நகரில் புதிய பெட்ரோல் பங்க் !

அதிரையில் துரிதமாக குடியிருப்புகள் வளர்ச்சியடைந்து வருகின்ற பகுதிகள் பிலால் நகர், ஆதம் நகர். இவை சேது பெருவழிச்சாலைப் [ ECR ] பகுதியில் அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் எந்நேரமும் வாகனங்கள் கடந்து செல்கின்ற பரபரப்பான பகுதியாக இருக்கின்றன.

இங்கு புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. அதிரையரின் முதலீட்டில் உருவாகி வரும் இந்த பெட்ரோல் பங்க் விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு விழா காணவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



4 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றி.!

    அதிரையைச்சுற்றி இதுவரை மொத்தம் நான்கு பெட்ரோல் பங்க்குகள் உருவாகியிருப்பதை பார்த்தால் நமதூரின் துரீத முன்னேற்றம் தெரிகிறது.

    இன்னும் பல தொழில்களும் அதிரையிலேயே முதலீடு செய்து தொடங்கினால் நமதூரும் பிரபலமான பெருநகரில் ஒன்றாக திகழும் காலம் வெகு தூரம் இல்லை.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஊர் பற்றிய செய்தி ..பார்க்க ..கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    ReplyDelete
  3. பெட்ரோல் பங்குகள் எத்தனை வந்தாலும் பெட்ரோல் விலை என்ன குறையவா போகிரது....நேற்று கூட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.00 எகிரியது..அது போகட்டும் பெட்ரோல் விலை ரூ.500ஐத்தாண்டினாலும் போட ஆள் இருக்குப்பா!....

    ____________________________
    J.M MOHAMED NIZAMUDEEN,
    S/O K.M.A JAMAL MOHAMED,
    www.nplanners.webs.com

    ReplyDelete
  4. அதிரை விரைவில் தொழில்லுக்கு ஏற்ற இடமாக மாறும் அதற்க்கு சில முன்நேற்றக்கள்.பதிவுக்கு நன்றி அதிரை நியூஸ்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.