.

Pages

Wednesday, February 6, 2013

அதிரையில் கட்டிமுடித்தும் திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகம் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி கீழத்தெரு. இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 9 லட்சம் ஒதுக்கீட்டில் ஆண் பெண் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கில் திறக்கப்படாமல் இருப்பது இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்த சுகாதார வளாகத்தை அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து திறப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா !?

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    நல்லதொரு முயற்சியோடு கட்டி இருக்கின்றனர், பாராட்டுக்கள், அதே நேரம் பொதுமக்கள் பயன்படும்வகையில் செயல்பட்டால் பாடுபட்ட முயற்சிக்கு இன்னும் அதிகமாக பலன் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

    சம்பந்தப்பட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாது காலக்கிரமத்தில் செயல்பாட்டிற்கு கொண்டுவரும் என்று நம்புகின்றோம்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. கவனத்தில் கொண்டுவந்த அதிரை நியூஸ்சிற்கு முதலில் நன்றி.

    இவ்வளவு முயற்சி எடுத்து கட்டிய இந்த கழிப்பிட கட்டிடம் இதற்க்கு மேலும் கால தாமதமின்றி திறக்க பேரூராட்சிதான் பொறுப்பேற்று கூடிய விரைவில் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. அதிரை சேர்மன் நண்பர் அஸ்லம்..
    இந்த செய்தியை அறிந்தால் அவசியம் பதில் தருவார் ..அல்லது அதிரை நியூஸ் மூலம்
    கேட்டு விளக்கம் பெறலாமே ..

    ReplyDelete
  4. நல்லதொரு முயற்சி எடுத்து கட்டபட்ட கழிப்பிட கட்டிடத்தை உடன் திறக்க இது சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடன் கல்த்தில் இறங்குமா காலம் தாழ்த்தாமல் இதையாவது உடன் திறக்குமா ? ஏன் என்றால் மேலத்தெரு பெண்கள் குளத்தில் ஒரு கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 6 ஆண்டு காலமாக திறக்படாமலேயே இன்று சிறுவர்களால் அடித்து நொருக்கப்பட்ட நிலையில் கிடக்கிறது அதே நிலை இந்த கழிப்பிடத்திற்க்கும் ஏற்ப்படாமல், இது சம்மந்தப்பட்ட ஆதிகாரிகள் விரைந்து உடன் நடவடிக்கை எடுக்குமா ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.