தென்மேற்கு வங்ககடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. நேற்று அதிகாலை அதிரையில் பெய்த பலத்த மழையில் 20 மில்லி மீட்டர் பதிவானது.
அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதல் பலத்த மழை அதிரையில் பெய்து வருகின்றது. தொடர் மழையால் அதிரையில் உள்ள தாழ்வான பகுதியாக கருதப்படுகிற ஒரு சில இடங்கள் வெள்ளத்தால் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.
அதிகாலை முதல் பேரூராட்சி ஊழியர்களும் பாதிப்படைந்த பகுதிகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். புதுத்தெரு குடிசைப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது குறித்து அதிரை பேரூராட்சி தலைவர் அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. உடன் துரித நடவடிக்கையில் இறங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அதிரையில் பெய்த மழையினால் ஏற்ப்பட்ட பாதிப்பை புகைப்படங்கங்களுடன் அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான பதிவு, நேரில் பார்ப்பதை விட இந்தப் புகைப்படத்தில் பார்த்தாலே போதுமானது.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மழை வந்தால்தான் தெரியுது ஊரின் அருமை.ஒரு நாள் பெய்யிந்த மழைக்கு இப்படியா?
ReplyDeleteமழை வந்தால்தான் தெரியுது ஊரின் அருமை.ஒரு நாள் பெய்யிந்த மழைக்கு இப்படியா? காரணம்? வீடு கட்டுவதற்கு முன் வாய்கள் வசதி பற்றி யோசிக்காதது..... சரிதானே?
ReplyDelete