.

Pages

Friday, March 29, 2013

கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டம் !

சென்ற மாத அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டத்தில் இனி ஒவ்வொரு மஹல்லாஹ் பள்ளிவாசல்களிலும் மாதந்திரக் கூட்டத்தை நடத்துவது  என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து இன்று [ 29-03-2013 ] மாலை 4.30 மணியளவில் முதல் கூட்டமாக நமதூர் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் அதிரை பைத்துல்மாலின் தலைவர் ஹாஜி. ஜனாப் S. பரகத் அவர்கள் தலைமையில், கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளின் முன்னிலையில், பைத்துல்மால் நிர்வாகிகளின் பங்களிப்போடு இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரல் :

1. கிரா-அத் : ஹாஜி. ஜனாப் சிஹாப்துல்லா ( பொருளாளர்)  

2. வரவேற்புரை : ஹாஜி. ஜனாப் A.S. அப்துல் ஜலீல் (இணைச் செயலாளர்)

3. மாதாந்திர அறிக்கை வாசித்தல் : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது (செயலாளர்)

4. தெருவில் புழங்கும் சைக்கிள் வட்டியை படிப்படியாக குறைக்கும் நோக்கில் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 3000/- வரையிலான வட்டியில்லா சிறுதொகை கடன் திட்டத்தை கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளின் பங்களிப்போடு அதிரை பைத்துல்மால் சார்பாக கடற்கரைத்தெரு மஹல்லாவில் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முதல் முயற்சியாக ரூபாய் 20,000/-த்தை ஒதுக்குவது எனவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதற்காக கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் சகோ. அஹமது ஹாஜா, சாகுல் ஹமீது, சிராஜுதீன் ஆகியரோடு கடற்கரைத்தெரு மஹல்லாவைச் சார்ந்த அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் சகோ. இப்ராஹீம், அக்பர் ஹாஜியார் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு [ 2013-2014 ]  முதல் அதிரை பைத்துல்மாலின் “உயர்க்கல்வி திட்டத்தை” அமல்படுத்துவது தொடர்பாக கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் ஒத்துழைப்பை கோரினார் அதிரை பைத்துல்மாலின் இணைச் செயலாளர் சகோ. A.S. அப்துல் ஜலீல் அவர்கள்.

6. நன்றியுரை : ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முஹைதீன் [ துணை தலைவர் ]

குறிப்பு : அடுத்த மாதாந்திரக்கூட்டம் நமதூர் தரகர்தெரு மஹல்லாவில் நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ]

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. நல்லதோர் முடிவு மென்மேலும் பயனளிக்க அல்லாஹு துணை புரியட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.