.

Pages

Wednesday, October 16, 2013

மதுக்கூர் அருகே அரசு பேரூந்து கவிழ்ந்ததில் 23 பேர் காயம் !

பட்டுக்கோட்டையிலிருந்து பெருகவாழ்ந்தான் நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. மதுக்கூர் அருகே படப்பைக்காடு கிராமத்தில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றாராம். அப்போது, ஸ்டியரிங் உடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள பாட்டுவானட்சி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த 11 பெண்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர். இவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து மதுக்கூர் போலீஸார் விசாரிக்கின்றனர். 

மேலும் சாலையோரம் எரிக்கப்பட்ட குப்பையிலிருந்து வெளிப்பட்ட புகை மூட்டம் காரணமாக பஸ் டிரைவர் தடுமாறி பஸ்ஸினை தடுப்பு சுவர் தாண்டி பாலத்திலிருந்து வயலுக்குள் செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. 



Thanks : Prof. Srinivasan (KMC)

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.