.

Pages

Tuesday, October 22, 2013

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இலியாஸ் அவர்களின் இல்லத் திருமணத்தில் தலைவர்கள் பங்கேற்பு !

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இலியாஸ் அவர்களின் சகோதரரும், கேம்பஸ் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினருமாகிய வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி அவர்களின் திருமண நிகழ்ச்சி கடந்த [ 20-10-2013 ] அன்று காலை நமதூர் செக்கடி பள்ளியின் வளாகத்தில் மார்க்க சிறப்பு  சொற்பொழிவோடு இனிதே நடைபெற்றன.

இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, மாநில பொது செயலாளர் நிஜாமுதின், கேம்பஸ் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில நிர்வாகிகள், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் MLA, அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம், மஹல்லா நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், உற்றார் - உறவினர் - நண்பர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வந்திருந்த அனைவரையும் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இலியாஸ் மற்றும் மணமகன் வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி ஆகியோர் அன்போடு வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.




1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.