.

Pages

Wednesday, October 30, 2013

புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணிகளில் அதிரை கவுன்சிலர்கள் !

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை வாக்காளர் சுருக்கமுறை திருத்தப் பட்டியல் முகாம் நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து. இதற்கான  புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணிகள் அதிரையில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பதிவுசெய்ய 31-12-1995-க்கு முன்பு பிறந்தவர்களாகவும், 1-1-2014 அன்று 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதால், தற்போது சேர்க்கப்பட உள்ள வாக்காளர்களையும் பட்டியலில் சேர்த்து, ஜனவரி முதல் வாரத்தில் இறுதி பட்டியல் வெளியிடப்படவுள்ளது.  மேலும், தேசிய வாக்காளர் தினமான ஜன. 25-ம் தேதி வாக்காளர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிகளுக்காக அதிரை பேரூராட்சியின் 12 வது வார்டு உறுப்பினர் நூர்லாட்ஜ் செய்யது மற்றும் 14 வது வார்டு உறுப்பினர் முஹம்மது செரீப் ஆகியோர் அவரவர்களுக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






4 comments:

  1. Meamparel paas mark. 12. 14. 19 ok ma.

    ReplyDelete
  2. .தகவலுக்கு நன்றி.

    18 வயது நிரம்பியவர்கள் கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள நல்லதோர் வாய்ப்பு இந்த வாய்ப்பை பயன்படுதிக்கொள்ளவும்.

    ReplyDelete
  3. புதிய வாக்காளர் பதிவின்போது எழுத்துப் பிழையில்லாமல் பதிந்து கொடுக்கவும். கவுன்சிலர்களும் அதற்க்கு ஒத்துழைத்து பதிய வருபவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. நல்லதோர் வாய்ப்பு இந்த வாய்ப்பை பயன்படுதிக்கொள்ளவும்.

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.