அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 21-வது வார்டில் அமைந்துள்ள ஆலடித்தெரு, இங்கு வசிக்கக்கூடிய மக்கள் பல வருடங்களுக்கு முன்பே தங்களின் சொந்த செலவில் கழிவு நீர் குழாய்கள் அமைத்து பேரூர் மன்றத்திற்கோ பொது மக்களுக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் சுத்தமாக பராமரித்துவருகிறார்கள்.



ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் அரசின் சார்பாக கான்க்ரீட் சாலை அமைத்ததால் பேரூராட்சியின் செலவில் குழாய்கள் மட்டும் பதித்தார்கள், ஆனால் சரியான பாதுகாப்பான தொட்டி கட்டாததால் அவ்வப்போது தொட்டி உடைவதும் அதில் அடைப்பு ஏற்படுவதுமாக உள்ளது, பலமுறை இந்ததெருவாசிகளே அதை சீர் செய்துவிடுவார்கள், காரணம், சம்பதப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தில் முறையிட்டால் அவர்களின் துரிதத்தன்மை கேள்விக்குறியே, மேலும் அங்கு அமைந்துள்ள முஹைதீன் ஜும்மா பள்ளியில் ஜும்மா நேரத்தில் அதிக தண்ணீர் புழக்கத்தினால் இந்த தெரு சாக்கடை ஆறு போல் காட்சியளிக்கும், தொழுகைக்கு வரக்கூடிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அசுத்தத்தை மிதித்துக்கொண்டு பள்ளியினுள் செல்லக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுகின்றது. மேலும் இந்த இடம் நான்கு முக்கங்களை கொண்ட வேகத்தடையில்லாத சாலை என்பதால் பல பக்கத்திலிருந்தும் வரக்கூடியவர்கள் பெரும் சிரமத்திற்கு அளாகின்றனர்.
வேகத்தடை வேண்டும்:
இதே இடம், நான்கு தெரு வழிச்சாலையாக உள்ளதால், இவ்வழியே பயனிக்கின்ற மோட்டார் வாகனிகள் மிக வேகமாக செல்கிறார்கள், எத்தனையோ முறை அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. பலமுறை சம்பதப்பட்ட வார்டு உறுப்பினரிடமும் பேரூராட்சித்தலைவரிடமும் எடுத்துச்சொல்லியும் நிறைவேற்றப்படவில்லை.
பேரூர் நிர்வாகம் செவிமடுக்குமா ?
அதான் அடுத்ததா ஒரு 'மாபெரும்' பேட்டி ஒன்னு எடுப்பீங்களே, அதையும் எடுத்து போட்டுடுங்க!
ReplyDeleteநோய் வருமுன் காப்பற்றுமா? பேரூராட்சி நிர்வாகம்.
ReplyDeleteநீங்கள் எத்தனைமுறை படம்பிடிச்சு போட்டாலும் கண்டுகொள்ளாத நமது ஒரே வார்டு உறுப்பினர் 21 வது வார்டு உறுப்பினர் மட்டும்தான் முன்னர் இதே தெருவில்தான் நமக்கு நாமே திட்டத்தில் முறைகேடு நடந்தது தமிழக அரசால் நமக்கு நாமே திட்டத்தின் வாயிலாக ரூ: 1,50000 ஆயிரம் ஒதுக்கப்பட்டு நிறைவேற்றபட்ட முறைகேடான பணிகள்
ReplyDeleteஅரசு உத்தரவு: பழைய சிமெண்ட் குழாய்களுக்கு மாற்றாக அதே இடத்தில் புதிய சிமெண்ட் குழாய் நிறுவவேண்டும்
இவர்கள் செய்த முறைகேடு: குறுகிய துவாரம் கொண்ட பிளாஸ்டிக் குழாய் அமைத்தது
அரசு உத்தரவு: 6 அடி இடைவேளியில் கழிவுநீர் தொட்டி அமைக்கவேண்டும்
இவர்கள் செய்த முறைகேடு: 10 அடி இடைவேளியில் கழிவுநீர் தொட்டி அமைத்தது
அரசு உத்தரவு: கழிவுநீர் தடையின்றி செல்ல கொஞ்சம் வாட்டமாக குழாயை நிறுவவேண்டும்
இவர்கள் செய்த முறைகேடு:ஏற்றம் இறக்கமாக தனது மனம்போல நிறுவியது
இதுபோன்று பல முறைகேடுகள் காரணமாக அடிக்கடி இப்பகுதியில் மற்றுமல்லாமல் இத்தெரு முளுவதும் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கமான ஒன்றுதான் இது ஒன்றும் புதிதல்ல
இதற்க்கு முழுகாரணம் கழிவு குழாய் சீரமிக்கும் பணியின்போது கண்டும்காணாமல் இந்த வார்டு உறுப்பினர் தனது பணம் கொட்டும் கட்டட தொழிலில் மும்முரமாக நின்றுவிட்டு மக்கள் சமுதாய பணியில் அலட்சியமாக செயல்பட்டதே
இப்படி முறைகேட்ட உறுப்பினரை முறை இல்லாமல் பலமுறை வாக்களித்து உறுப்பினராக தேர்தெடுத்த நமது மக்களின் அறிவு எங்கே தொலைத்துவிட்டது ஆகவே எனதருமை சமுதாய சகோதர சகோதரிகளே இனிவரும் காலங்களிலாவது விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒரு நல்ல இறை அச்சமுள்ள தீந்தாரியை உங்கள் உறுப்பினராக தேர்தெடுத்து உங்கள் பகுதி குறைகளை இறைவன் உதவியுடன் அவர்மூலம் நிறைவேற்றிக்கொளுங்கள்
நமது சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கனிவான வேண்டுகோளுக்கு இணங்க பணிவுடன் வாக்களித்த மக்களுக்கு இவர்கள் செய்யும் சமுதாய சேவை இதுதானோ?
அன்பிற்கினிய சங்கத்தின் தலைவர்களே, நிர்வாகிகளே, உறுப்பினர்களே என்றைக்காவது உங்களால் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்ற தொகுதிகளின் உறுப்பினரை அழைத்து மக்கள் சேவை பணிகளைப்பற்றி விசாரித்ததுண்டா?அல்லது இவர்களின் பணிகளைபற்றிதான் மக்களிடம் விசாரித்ததுண்டா?
ஆகவே அன்பிற்குரிய சமுதாய சிற்பிகளே அல்லாஹுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் கண்டிப்பாக ஒவ்வர்வரும் தனக்களிக்கப்பட்ட பணியாக இருந்தாலும்சரி தன்னால் வாக்களிக்கப்பட்ட விசயமாக இருந்தாலும் சரியே அதை சரிவர செய்யவில்லையெனில் உங்கள் பிடி வல்ல அல்லாஹ்வின் கையில் இருக்கிறது நாளை மறுமை நாளில் அவனால் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையளிக்காமல் ஒருபோதும் சுவர்க்கம் செல்ல இயலாது என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு செயல்படுங்கள்
வல்ல அல்லாஹு நம் அனைவருக்கும் பேரருள் புரிவானாக ஆமீன்