அதிரையில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளம் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. அங்கு 1000க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வந்தது. இங்கு தயாரான உப்பு பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மழைக்காலங்களில் உப்பளங்களில் மழை நீர் புகுந்ததால் சில நாட்கள் மட்டும் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நீர் வெளியேற்றப்பட்டு உப்பு உற்பத்தி வழக்கம்போல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அதிரையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழை வெள்ளம் புகுந்தது. இதைத் தொடர்ந்து உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் 1 மாதத்துக்கு உப்பு உற்பத்தியை நிறுத்தி விட்டு ஜனவரி மாதம் மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க முடிவு செய்துள்ளனர். எனவே அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
நன்றி : மாலை மலர்
புகைப் படங்கள்: அதிரை நியூஸ்
பதிவுக்கு நன்றி. புகைப்படம் அருமை.
ReplyDeleteபுகைப்படம் அருமை.
ReplyDelete