.

Pages

Saturday, October 12, 2013

அதிரையில் பெய்யும் திடீர் மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தி வைப்பு !

கடந்த சில நாட்களாக அதிரையில் யாரும் எதிர்பாவிதமாக திடீர் மழை பெய்து வருகிறது. எந்த நேரத்தில் மழை வரும் என்று கணிக்க முடியாமல் உள்ளதால் அதிரையில் உப்பு உற்பத்தி பாதிப்படையும் நிலையில் உள்ளது.

அதிரையில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளம் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. அங்கு 1000க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர்.

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வந்தது. இங்கு தயாரான உப்பு பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மழைக்காலங்களில் உப்பளங்களில் மழை நீர் புகுந்ததால் சில நாட்கள் மட்டும் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நீர் வெளியேற்றப்பட்டு உப்பு உற்பத்தி வழக்கம்போல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அதிரையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழை வெள்ளம் புகுந்தது. இதைத் தொடர்ந்து உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் 1 மாதத்துக்கு உப்பு உற்பத்தியை நிறுத்தி விட்டு ஜனவரி மாதம் மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க முடிவு செய்துள்ளனர். எனவே அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.







நன்றி : மாலை மலர்
புகைப் படங்கள்: அதிரை நியூஸ்  

2 comments:

  1. பதிவுக்கு நன்றி. புகைப்படம் அருமை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.