.

Pages

Wednesday, October 16, 2013

திடல் தொழுகைக்கு திரண்டு வந்த அதிரை மக்கள் [ புகைப்படங்கள் ] !

ஹஜ் பெருநாளை முன்னிட்டு அதிரையில் இன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை மற்றும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக திடல் தொழுகைகள் இரு வேறு இடங்களில் நடைபெற்றன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் இன்று காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன. சொற்பொழிவில் சமுதாயத்தில் புழங்கும் போலியான ஒற்றுமை குறித்து மார்க்க அடிப்படையில் விளக்கி கூறப்பட்டது.

அதேபோல் அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்ற பெருநாள் திடல் தொழுகையை வழக்கம் போல் இந்த வருடமும் மேலத்தெரு சானவயலில் இன்று காலை 7.45 மணியளவில் சிறப்பாக நடந்தது. இதில் சேக்தாவூது ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன. சொற்பொழிவில் உளத்தூய்மை, மறுமை சிந்தனை, பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்கள் ஆகிய மூன்று விசயங்கள் குறித்து மார்க்க அடிப்படையில் விளக்கி கூறப்பட்டது.

அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக இரு தொழுகையிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன.

தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதி முழுதும் நெருக்கடியாக காணப்பட்டது.

தவ்ஹீத் ஜமாத் திடல் தொழுகை :



ஈத் கமிட்டி திடல் தொழுகை :






4 comments:

  1. "ஈதுல் அழ்ஹா"

    அஸ்ஸலாமு அழைக்கும்...
    அகிலத்தார் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிம்மதியும் சந்தோஷமும் மிகுந்த நன்நாளாக இந்த
    "தியாக திருநாள் "
    ஆகட்டும்.
    இன்ஷா அல்லாஹ்...!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமுஅலைக்கும், நல்ல ஆக்கம், அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த பதிவில் பெண்கள் பக்கம் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தய்வு செய்து அதை நீக்குமாறு அதிரை நியூஸ் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் பெண்களின் பக்கம் புகைப்படம் எடுக்காமல் இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. அனைவர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.