.

Pages

Tuesday, October 22, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிரை காதிர்முகைதீன் கல்லூரியின் வேதியியல் துறை கருத்தரங்கத்தில் மாணவர்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று 21/10/2013 காலை கல்லூரியின் முதல்வர் A. ஜலால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் T. முருகேசன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் P.முத்துக்குமாரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்து கொள்ள வலியுறுத்தியும் ஒவ்வொரு மாணவர்களும்  வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றியும்  சிறப்புச் சொற்ப்பொழிவு ஆற்றினார்கள்.

இவ்விழாவில் கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

முன்னதாக A.கலீல் ரஹ்மான் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். விழாவின் இறுதியில் கா.மு.கல்லூரியின் துணை முதல்வர் A.M.உதுமான் முகைதீன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவினை பேராசிரியர் செய்யது கபீர் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் அனைத்து துறையைச் சார்ந்த துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.     










1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.