அமீரகம் துபையில் இன்று 15/10/2013 செவ்வாய்க்கிழமை புனித தியாகத் திருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.துபாய் நேரப்படி காலை 6.40 மணிக்கு ஹஜ்ஜுப் பெருநாளைக்கான தொழுகை சிறப்புடன் நடந்தது. டேரா துபை ஈத்காவில் நடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இங்குள்ள அதிகபட்ச பள்ளிவாசல்களில் பெருநாளுக்கான தொழுகை நடத்தப்பட்டாலும், துபை டேரா பகுதியில் வசிக்கும் நம் அதிரைச்சகோதரர்கள் அநேகமானோர்களும் மற்றும் பிற ஊர்க்காரர்களும், பிற நாட்டவர்களும் இங்குள்ள ஈத்கா மைதானத்தில் தொழுவதற்கு விரும்பி வருவார்கள். காரணம் அனைத்து நண்பர்கள் சொந்தபந்தங்களை ஒன்றாக ஓரிடத்தில் சந்தித்து பெருநாள் வாழ்த்தினை பகிர்ந்து கொள்ள ஏற்ற இடமாக நகருக்கு மத்தியில் இந்த டேரா ஈத்கா மைதானம் அமைந்துள்ளது.
சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொண்ட இந்த பெருநாள் தொழுகையின் காலைப்பொழுதினில் அனைவரும் புத்தாடையுடன் தொழுகையை முடித்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாஃபா செய்து கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொண்ட இந்த பெருநாள் தொழுகையின் காலைப்பொழுதினில் அனைவரும் புத்தாடையுடன் தொழுகையை முடித்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாஃபா செய்து கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
துபையில் மகிழ்வுடன் கொண்டாடப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் வண்ணப்படங்கள் இதோ...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.