.

Pages

Sunday, November 17, 2013

ஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரண்டு வந்த அதிரையர் !

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கடந்த 06-10-2013 அன்று முதல் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வந்தன.

தினமும் காலை நேரங்களில் புஹாரி ஷரீஃப் வாசிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்ற வந்தன. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற நிகழ்ச்சியில் துஆ கேட்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வந்தன. தினமும் சராசரியாக 1000 த்திலிருந்து 1500 பேர் வரை கலந்துகொண்டு சிறப்பித்து வந்தனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிகழ்ச்சி தினமும் அதிகாலையில் ஆரம்பமாகி காலை 8.20 மணிவரை நடைபெற்று வந்தது. இதில் உள்ளூர் பொதுமக்களும், வெளிமாநிலத்திலிருந்து வருகை தந்த ஏராளமான சகோதரர்களும் பங்கேற்றனர். குறிப்பாக கடந்த [ 12-11-2013 ] அன்று நடைபெற்ற மஜ்லீசில் முன்னாள் மத்திய அமைச்சர் C.A. இப்ராஹீம் அவர்கள் கர்நாடாக மாநிலத்திலிருந்து வருகை தந்து கலந்துகொண்டார்.

புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின் இறுதி நாளான இன்று ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன. முன்னதாக லெ.மு.செ. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் சிறப்பு துஆவும் இன்றைய மஜ்லிஸில் ஓதப்பட்டது.

கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் ப்ளாஸ்டிக்பை பயன்பாடுகளை தவிர்த்துக்கொண்ட ஜாவியா நிர்வாகத்தினருக்கு அதிரை பேரூராட்சியின் சார்பாக நன்றி அறிவிப்பு பேனர்கள் இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் பேரூராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

தொலை தூரத்திலிருந்து வருகை வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை ஜாவியா சாலையின் இருபுறமும் நிறுத்தி இருந்ததால் மஜ்லீஸ் முடியும் வரை அப்பகுதி முழுதும் நெருக்கடியாக காணப்பட்டது.

நிர்வாக கமிட்டி சார்வாக 5000 உணவு பாக்கெட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இன்றைய நிறைவு நாளில் 5000 பேர் வரை கலந்துகொண்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனித்தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகுரிய ஏற்பாடுகளை ஜாவியா நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.










 





13 comments:

  1. ஜாவியா கலைக்கட்டிருக்கு

    ReplyDelete
  2. அருமையான புகைப்படங்கள்..........நன்றி

    ReplyDelete
  3. 40 நாள் அதிரை புஹாரி ஷரீஃப்..?
    இது நபி காட்டிய வழியா.?

    "செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்"
    என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி),
    நூல்: நஸயீ 1560

    அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
    (அல்குர்ஆன் 33 : 36)

    இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி-
    நூல் : புகாரி 2697

    சகோதரர்களே சிந்திப்பீர்..!

    ReplyDelete
    Replies
    1. Please dont start unnecessary comment / arguement..They are reading Buhari Hadhees and distributing Hadhees through Alim.

      Delete
    2. //Please dont start unnecessary comment / arguement..They are reading Buhari Hadhees and distributing Hadhees through Alim.//


      மேலே பதிந்து இருப்பது இரண்டு புகாரி ஹதீஸ் ஒரு குரான் வசனம்

      இது இவர்களுக்கு தேவை இல்லாத விஷயம் ,புகாரி மஜ்லிஸ் சில் படிக்க படாத புகாரி ஹதீஸ் என்று தான் நினைத்து இருந்தோம் தேவைபடாத புகாரி ஹதீஸ் என்று இப்போது தான் தெரிகிறது

      இதுல வேறு ஆலிம்கள் மூலம் புஹாரி ஹதீஸை விநியோகம் பண்ணுறாங்களாம்

      Delete
    3. What you are trying to say? Please clarify

      Delete
    4. உங்கள் அனைவர் மீது சாந்திவும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!!!

      "எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்;

      (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை."

      -சூரா பனி இஸ்ராயீல் | 15

      Delete
    5. Wa Alaikkum salam Brother Thank you for your kind ,That's why I don't reply

      Delete
    6. //What you are trying to say? Please clarify//

      What I trying to say means just you read the link given below .I think you can understand

      http://adirai-tntj.blogspot.com/2012/10/blog-post_20.html

      Delete
  4. சிந்தித்தோம்.

    அனாச்சாரம் என்றால் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. சிந்தித்தோம்.

      அனாச்சாரம் என்றால் என்ன ?//

      பித்அத் வழிகேடு...!

      Delete
  5. அதிரையில் ஜாவியா எனும் சிறப்புண்டு
    அதற்க்கு கொல்லை எனும் தனியொரு இடமுண்டு
    அங்கே அடித்த லூட்டிகள் இன்றும் நினைவுண்டு
    உடுத்திய வேட்டியில் நார்சா பெற்ற நண்பர்களில் நானுமுண்டு

    ReplyDelete
  6. ///
    சிந்தித்தோம்.

    அனாச்சாரம் என்றால் என்ன ?//

    பித்அத் வழிகேடு...!
    ///

    அதன் விளக்கம்தான் என்ன ?

    ReplyDelete