அப்போது அதிரையில் ஆய்வை மேற்கொண்டு வரும் தஞ்சை மாவட்ட பேரூராட்சிதுறை அலுவலரிடம் [ AD ] போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், தொடர்ந்து இந்தப்பகுதி புறக்கணிக்கப் படுவதையும் எடுத்துக்கூறினர்.
இதை அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்ட பேரூராட்சிதுறை அலுவலர் இதுகுறித்து விசாரணை செய்து உடன் நவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது...
கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன... பள்ளி கல்லூரி செல்லும் எங்களின் குழந்தைகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும் கண்டுகொள்ள வில்லை. இதனால் பாதிப்படைந்த நாங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.
பேரூராட்சிதுறை அலுவலரிடம் கருத்து கேட்டபோது...
மின்சார தட்டுப்பாடல் சில இடங்களில் குடிநீர் வழங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இவை உடனடியாக சரி செய்யப்படும். குடிநீர் சீராக வழங்குவது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது அதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் அவர்கள் மேற்கொள்வார்கள் என்றார்.
பேச்சுவார்த்தையின் போது 11 வது வார்டு பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்கியதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதி முழுதும் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டன.
மின்தட்டுபடும் நேரங்களில் அதிரை பேரூராட்சியின் சார்பாக ஜெனரட்டர் பொருத்தி குடிநீர் வழங்குவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது நமது ஊர பெண்கள் போராட்டம் செய்ய துனிந்து விட்டார்கள் சந்தோசம் நமது உரிமை நமது கடமை.இப்படிதான் இருக்க வேண்டு பெண்கள். .
ReplyDeleteபீடர் லைன் ஏற்படுத்தினால் நிலைமையை ஓரளவு சமாளிக்க இயலும்.
ReplyDelete