.

Pages

Saturday, November 30, 2013

குடிநீர் வழங்காததை கண்டித்து அதிரை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை !

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நிலவி வரும் மின்சார தட்டுப்பாட்டல் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் எதிரொலியாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு புதுத்தெரு பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் பேரூராட்சியை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் அதன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிரையில் ஆய்வை மேற்கொண்டு வரும் தஞ்சை மாவட்ட பேரூராட்சிதுறை அலுவலரிடம் [ AD ] போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், தொடர்ந்து இந்தப்பகுதி புறக்கணிக்கப் படுவதையும் எடுத்துக்கூறினர்.

இதை அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்ட பேரூராட்சிதுறை அலுவலர் இதுகுறித்து விசாரணை செய்து உடன் நவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது...
கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன... பள்ளி கல்லூரி செல்லும் எங்களின் குழந்தைகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும் கண்டுகொள்ள வில்லை. இதனால் பாதிப்படைந்த நாங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

பேரூராட்சிதுறை அலுவலரிடம் கருத்து கேட்டபோது...
மின்சார தட்டுப்பாடல் சில இடங்களில் குடிநீர் வழங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இவை உடனடியாக சரி செய்யப்படும். குடிநீர் சீராக வழங்குவது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது அதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் அவர்கள் மேற்கொள்வார்கள் என்றார்.

பேச்சுவார்த்தையின் போது 11 வது வார்டு பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்கியதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதி முழுதும் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டன.

மின்தட்டுபடும் நேரங்களில் அதிரை பேரூராட்சியின் சார்பாக ஜெனரட்டர் பொருத்தி குடிநீர் வழங்குவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.



2 comments:

  1. இது நமது ஊர பெண்கள் போராட்டம் செய்ய துனிந்து விட்டார்கள் சந்தோசம் நமது உரிமை நமது கடமை.இப்படிதான் இருக்க வேண்டு பெண்கள். .

    ReplyDelete
  2. பீடர் லைன் ஏற்படுத்தினால் நிலைமையை ஓரளவு சமாளிக்க இயலும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.