இதுகுறித்து பேரூராட்சி தலைவரோடு தொடர்புடைய அவரது நண்பரிடம் விசாரித்த வகையில்...
நமதூர் பேரூராட்சி தலைவராக ஜனாப் அஸ்லம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அதிராம்பட்டினம் பேரூராட்சி மிகப்பெரிய மாற்றத்தை பொதுமக்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.
சுத்தம் சுகாதாரம் என்ற கொள்கையில் முழு முயற்சியாக பேரூராட்சி ஈடுபட்டு ஊழலற்ற நிர்வாகத்தை தர நமதூர் பேரூராட்சி தலைவர் அஸ்லம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் அறிந்ததே.
தவறுகளை சுட்டி காட்டினால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், கூப்பிட்ட குரலுக்கு ஊர் பிரச்சினைகளை தீர்க்க முன்னிற்கும் ஆர்வம் போன்றவைகளால் பேரூராட்சி தலைவர் அஸ்லம் பாராட்டுக்குரியவராக இருக்கிறார். இதனை பொறுக்காத சிலர் அவர் மீது அவதூறுகளை சுமத்தியும், வீண் பொய்களை பரப்பியும் வருகின்றனர். இவர் மீது பொய் வழக்கும் நேற்று பதியப்பட்டு ஜாமீனுக்காக காத்திருக்கிறார்.
இவரது வளர்ச்சி பொறுக்காத சிலரே ஆளும் கட்சியின் உதவியுடன் தமது அதிகாரத்தை துஷுபிரயோகம் செய்து இவரை செயல்படாமல் தடுக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் இவர் சிறுபான்மை இனத்தவர் என்பதாலும் இவரை இந்த பணியை செய்யவிடாமல் தடுக்க ஒரு பிரிவினரும், இவரது வளர்ச்சியை பொறுக்காத ஒரு சில எதிர்கட்சியினரும் பொய் வழக்குகளை போட்டு இவரது பணியை முடக்கி அதிராம்பட்டினத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.
இதனை பொதுமக்கள் உணர்ந்து உண்மையை தெரிந்து இதுபோன்ற நயவஞ்சகர்களை அடையாளம் கண்டு கொண்டு புறக்கணிக்க வேண்டும் என முடித்துக்கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்து கொள்ள பன்னீர் அவர்களை தொடர்புகொண்ட போது நமது முயற்சி பலனளிக்கவில்லை.
நம்முடைய சமுதாய இயக்கமே சேர்மன் மீது பொய் வழக்கு போடும்போது மற்றவர்கள் சும்மாவா இருப்பார்கள்
ReplyDeleteபன்னீர் பொய் வழக்கு போட்டார் என்று இப்போது எழுதும் இனைய தளங்கள் 2 மாதங்களுக்கு முன்பு சேர்மன் மீது ஒருவர் பொய் வழக்கு போட்டார் அதை ஏன் எழுதவில்லை பொய் வழக்கு போட்டவருக்கு ஒரு இயக்கத்தில் பதவியும் கொடுத்தார்கள் அப்போது நீங்கள் என செய்து கொண்டுயிருந்தீர்கள்
ReplyDeleteயார் மீது கோபப்பட
ReplyDeleteயாரை குற்றம் சொல்ல
யாருக்கு அறிவுரை சொல்ல
இளஞர்கள் இந்த நாட்டின் தூன்கள் என்கிறோம்
அவர்களிடம்தான் இந்த அரசியல் பாடாய் படுகிறது
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஈரான் அமெரிக்க விவகாரமே சுமூக பேச்சில் முடியும்போது, இது என்ன?
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
எங்கள் மார்க்கத்தில் ஜாதி இல்லை, அப்போ எங்கள் மார்க்கத்தில் உள்ளவர் எப்படி உங்கள் மதத்தில் உள்ள ஜாதி பெயர் கூறி அலைபார்?
ReplyDeleteFazee Canada
40 ஆண்டு காலம் நமதூரில் யாரும் சேர்மன் மீது வழக்கு தொடரும் அளவுக்கு தையிரியம் இருந்ததில்லை அந்த கண்ட்ரோல் ஒரு பயம் இருந்தது அது இப்போது இல்லை தட்டி கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டி கொடுதும் தட்ட வேண்டிய நேரத்தில் தட்டியும் அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்தும் ஒரு ஆளுமையுடன் நம் முன்னோர்கள் ஆட்சி செய்தார்கள் அது தற்போது இல்லை
ReplyDeleteஅனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் நம் சேர்மனுக்காக
ReplyDeleteதுப்புரவு தொழிலாளி பேரூராட்சி தலைவர் மீது வழக்கு?
ReplyDeleteஅதிரை வரலாற்றில் இது புதுமையாக உள்ளது.????
தலைமை பதவி வகிப்பவர்கள் தன்னுடைய அதிகாரத்தை கொண்டுதான் தமக்குகீழ் உள்ளவர்களை வேலை வாங்க முடியும் அவ்வாறுதான் சேர்மன் செய்து இருப்பார் அவர் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை சுபுஹ் தொழுகை முடித்த உடனே அவரை பேரூராட்ச்சி அலுவலகத்தில் நான் பார்ப்பது உண்டு அவரே நேரில் வந்து ஊழியர்களை தெருவாரியாக வேலை வாங்குவார். சில நேரங்களில் வேலைப்பார்க்கும் இடங்கலுக்கு சென்று ஆய்வு செய்வார். இப்படிப்பட்டவர் சகோதரார் பன்னீர் அவர்களை இவ்வாறு அழைத்திருப்பாரா?
ReplyDeleteஇது ஒரு அரசியல் சூழ்ச்சியே
ReplyDeleteதுப்புரவு தொழிலாளி பேரூராட்சி தலைவர் மீது வழக்கு?
ReplyDeleteஅதிரை வரலாற்றில் இது புதுமையாக உள்ளது.????