.

Pages

Saturday, November 2, 2013

அதிரை நியூஸ் நடத்திய சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி [ காணொளி ]


'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' 


தகவல் தொழில்நுட்பமா !?   மாறிவரும் கலாச்சாரமா !? 

என்ற இரு வேறு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள். இதில் நடுவராக 'முத்தமிழ் நேசன்' கவிஞர் M.R. முத்து அவர்களும், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி T.V. பேச்சாளர் மதுக்கூர் இராமச்சந்திரன் மற்றும் 'நிருபர்' இல. சிவா M.A. ஆகியோர் இணைந்து ஓர் அணியிலும், இல்லையில்லை மாறிவரும் கலாச்சாராம்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி 'நகைச்சுவை தென்றல்' அதிரை புஹாரி மற்றும் 'சிந்தனை பேச்சாளர்' கவிஞர் தியாக. புருஷோத்தமன் ஆகிய இருவரும் மற்றறொரு அணியாக இருந்துகொண்டு நம்மையெல்லாம் நகைச்சுவையூட்டி சிந்திக்க வைக்கின்றனர்.

வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்ற இந்த சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியின் காணொளியை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு அன்புடன் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். 

இதோ அதன் காணொளி...

 

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    முதல் முயற்சி முத்தாக இருந்தது. எல்லோரும் நயம்பட பேசினார்கள், அவர்களுடைய வார்த்தையில் நகைச்சுவையோடு அர்த்தமும் இருந்தது, இக்கால கட்டத்தில் இதுபோன்ற பட்டிமன்றங்கள் தேவை.

    இது உலகத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் பொருந்தும், ஏன் அதிரை இளைஞர்களையும் செர்த்துதான்.

    பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. நல்லதொரு புதிய முயற்சி, ! சிறப்பானதொரு பட்டிமன்ற நிகழ்ச்சி. சமூக அக்கறையுடன் இந்நிகழ்ச்சியை எளிமையான நான்கு பேச்சாளர்களையும்,நடுவரையும் கொண்டுவந்து இன்றைய சமுதாயத்திற்கு தேவையான தலைப்பைத் தேர்ந்தெடுத்து சிறப்புடன் வழங்கிய அதிரை நியூஸ் குழுமத்தினருக்கு முதலில் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    அருமையான நகைச்சுவை உணர்வுடன் ஆழமான பல தகவல்களை அள்ளி வழங்கிய அந்த பேச்சாளர் மற்றும் நடுவர் அவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்நிகழ்ச்சி முழுவதையும் YOUTUBE- காணொளி யில் பார்த்தேன். கொஞ்சமும் தொய்வில்லாமல் பேச்சுக்கள் யாவும் நகைச்சுவையாகவும், சுவராஸ்யமாகவும், ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருந்தன. மீண்டும் அனைத்து பேச்சாளர்களுக்கும் நடுவருக்கும் இந்நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்த அதிரை நியூஸிற்க்கும் மீண்டும் நன்றியினையும் வாழ்த்தினையும் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.

      Delete
  3. புதிய முயற்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.