.

Pages

Monday, June 22, 2015

துபாயில் ரமலானையொட்டி பிச்சை எடுத்த 70 பேர் பிடிபட்டனர் !

ரமலான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல, முஸ்லிம்கள் ‘ஜக்காத்’ எனப்படும் தான தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமலான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே துபாய் நகரின் மசூதிகள், மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 70 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர்.

தற்போது பிடிபட்டவர்களில் பெண் ஒருவர். இவர் பிளைட் ஏறி பிசினஸ் விசாவில் இங்கு வந்திருப்பதும், இங்குள்ள நட்சித்திர ஓட்டல் ஒன்றில் தனது குழந்தைகளுடன் தங்கிருந்து பிச்சை எடுப்பது தெரியவந்தது. இந்த பெண்மணியிடம் துபாய் நாட்டின் நாணயம் திர்ஹம் ( இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 2,24,000 /- ) போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து பிச்சை எடுப்பவர்களை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படையினரை நியமித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.