பட்டுக்கோட்டை நகரில் முக்கியமான வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள இடம் பெரிய கடைத்தெரு. இப்பகுதியில் கேஸ் அடுப்புகள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் வீரமணி. இவர் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணி வாக்கில் தனது கடையில் அமர்ந்து கேஸ் ஸ்டவ் அடுப்புகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. வேலை செய்து கொண்டிருந்த கடை உரிமையாளர் வீரமணி தப்பி வெளியில் ஓடினார். சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியதில் அருகில் இருந்த கடைகளுக்கும் மளமளவென தீ பரவியது. இதில் மளிகைக்கடை, தையல் கடை, பெட்டிக்கடை, ஓட்டல், பேன்ஸி ஸ்டோர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகியது. அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, மதுக்கூர், திருமக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ஆர் ரெங்கராஜன், நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன், வட்டாட்சியர் சேதுராமன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ஆர் ரெங்கராஜன், நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன், வட்டாட்சியர் சேதுராமன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.