.

Pages

Monday, June 22, 2015

அதிரை அருகே தீ விபத்து !

அதிரை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை சாம்பல் ஆனது. அதிரை அருகில் உள்ள மழவேநீர்காடு கிராமத்தில் விவசாயி கணேசன் (65) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது 3 மகன்களுக்கும் திருமணமாகி அதே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென குடிசை வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது.

தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீவிபத்தில் ரூ.20 ஆயிரம் ரொக்கம், 13 பவுன் நகை, பைக் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. அதிரை போலீசார் வழக்குப் பதிந்து தீ விபத்து எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.