இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் வட்டம் மற்றும் பூதலூர் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமணம் மற்றும் இயற்கை மரணம் ஈமச்சடங்கு 22 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் காசோலைகளையும், சவுதி அரேபியாவில் பணியாற்றிய போது இறந்த பட்டுக்கோட்டை வட்டம், புலவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் திரு. சின்னக்கண்ணு அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.9 இலட்சத்து 76 ஆயிரத்து 655 க்கான காசோலையினையும், சவுதி அரேபியாவில் பணியாற்றிய போது இறந்த பட்டுக்கோட்டை வட்டம், நாடியம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் திரு. சண்முகசுந்தரம் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.60 ஆயிரத்து 512க்கான காசோலையினையும் மற்றும் 13 புதிய குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்த இன்றே தகுதியின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ரூ.800 மதிப்பிலான ஊன்றுக்கோல்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
ஆக மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சத்து 68 ஆயிரத்து 967 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், துணை ஆட்சியர் திருமதி. ஜனனி சௌந்தர்யா, நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட்சியர் திரு.எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மக்கள் பணியில் கவனம் செலுத்தும் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete