தமிழக கல்வித்துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் அட்டை இல்லாத மாணவ, மாணவிகளைக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 60 முதல் 70 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
தமிழக அரசின் கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளைப் பெற வரும் காலங்களில் ஆதார் அட்டை வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு கல்வித்துறை மூலமாகவே ஆதார் அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எவ்வளவு பேருக்கு ஆதார் அட்டை இல்லை என்பதை கணக்கெடுத்து, அந்த புள்ளிவிவரங்களை வரும் 30-க்குள் அனுப்பி வைக்க, தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் அட்டை இல்லாத மாணவ, மாணவிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதில் மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 60 முதல் 70 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
தமிழக அரசின் கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளைப் பெற வரும் காலங்களில் ஆதார் அட்டை வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு கல்வித்துறை மூலமாகவே ஆதார் அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எவ்வளவு பேருக்கு ஆதார் அட்டை இல்லை என்பதை கணக்கெடுத்து, அந்த புள்ளிவிவரங்களை வரும் 30-க்குள் அனுப்பி வைக்க, தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் அட்டை இல்லாத மாணவ, மாணவிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதில் மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
* Image Credit: Google
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.