.

Pages

Wednesday, June 24, 2015

அதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் 'றாலு வச்ச வாடா'வின் ஓனர்களோடு ஒரு நேர்காணல் [ காணொளி இணைப்பு ] !

திரையில் புனித மிகு ரமலான் மாத நோன்பின் முதல் நாள் முதல் தெருவெங்கும் முக்கிய பகுதிகளில் காணப்படும் வாடா, சமூசா, பஜ்ஜிக்கடைகளில் வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளது.

சங்கை மிகு ரமலான் மாதத்தில் அதிரையர் பலர் நோன்பு திறப்பதற்காக எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் பலகாரங்களை ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். மேலும் உற்றார் - உறவினர் நண்பர்களுக்காகவும் வாங்கிச் செல்ல மறப்பதில்லை. இதனால் கடைகளைச் சுற்றி காணப்படும் பகுதி முழுவதும் மாலை நேரங்களில் கூட்டமாகவும், பரப்பரப்பாகவும் காட்சியளிக்கின்றன. மேலும் வாடா, சமூசா, பஜ்ஜிக்கடைகளுக்கு போட்டியாக கபாப் கடைகளும் ஆங்காங்கே தென்படுகின்றன.

இவ்வாறு அதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் 'றாலு வச்ச வாடா'வின் ஒனர்களோடு நமது அதிரை நியூசின் ஆஸ்த்தான பங்களிப்பாளர் - அதிரை சாகுல் அவர்களின் வயிறு குலுங்க வைக்கும் கலகலப்பான ஒரு நேர்காணல்.


இது ஒரு மீள்பதிவு 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    சங்கை மிகு சஹர் ரமலான்.

    2013-ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ 2015-லும் வாசம் மாறாமல் இருக்குது, ஆனால் 2013-ல் இருந்த தரத்திற்கும் சுவைக்கும், 2015-ல் இருக்கின்ற தரத்திற்கும் சுவைக்கும் இனி ஏணி வைத்தாலும் எட்டாது.

    மேலும் விலையும் இப்போது உயர்ந்து உள்ளது. தரம் சுவை குறைந்து விட்டது.

    மக்களின் வாங்கும் அளவும் அதிகரித்து விட்டது.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.