.

Pages

Saturday, June 27, 2015

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி !

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 24 வது மாதாந்திர மெகா கூட்டம் 6/06/2015 வெள்ளிக்கிழமை  இஃப்தார் நிகழ்ச்சியுடன் இனிதே நடைபெற்றது.

கிராத்                      :  சகோ. சலீம்
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
நிகழ்ச்சி தொகுப்பு   : சகோ. நெய்னா முகமது
சிறப்பு பயான்        : மௌலவி சரபுதீன்

ரமலான் பிறை9-ல் ரியாத் பத்தாவில் உள்ள கிளாசிக் ரெஸ்டாரென்ட்டில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் இனிதே நடைபெற்றது. இதில் சுமார்  70 க்கும் மேற்பட்ட அதிரை வாசிகள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

சிறப்பு பேச்சாளராக மௌலவி சரபுதீன் ஆலிம் அவர்களின் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்கு செய்ய வேண்டிய கடமைகள்,  நோன்பு, ஜக்காத்,ஃபித்ரா பற்றிய விளக்கம் மக்கள் மத்தியில் பிரயோஜனமாக இருந்தது. கூட்டத்தில் ஜக்காத், சதக்கா, ஃபித்ரா-வை நோன்பு  25க்குள் வசூலித்து தலைமையகத்துக்கு அனுப்புவது என  முடிவு செய்யப்பட்டது.

அனைத்து மாதாந்திர கூட்டம் நடத்துவதற்கு இடமும், ஒத்துழைப்பும் வழங்கி கொன்டிருக்கும்  நமதூர் ( ஹாரா ) வாசிகளுக்கு ரியாத் பைத்துல்மால் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்ளப்பட்டது.

அடுத்த அமர்வு இன்ஷாஅல்லாஹ் வரும்  ஜூலை 24-ல் ஹாராவில் நடத்துவதென  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. இக் கூட்டத்திற்கு வருகை தந்த புதிய, பழைய உறுப்பினர்களுக்கு அதிரை பைத்துல்மால் மற்றும் ரியாத் கிளையின் சார்பாக மனமார்ந்த  நன்றியை தெரிவிக்கப்பட்டது. கூட்ட முடிவில் அகமது மன்சூர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.